“நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே, உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்” – (1பேதுரு 4:10)
பணிபுரிவதைவிட அதிகாரம் செலுத்துவதையே மனிதர்கள் அதிகம் விரும்புகிறார்கள். பணிபுரிய வேண்டும் என்று சொன்னால் கீழே இறங்கி வர வேண்டும். அதிகாரம் என்றால் மற்றவர்களை நமக்கு கீழ் வைத்துவிடலாம்.
இன்றைய காலங்களில் இறைப்பணி என்பது கடினமான பணியல்ல. கொஞ்சம் இரக்கமும் அன்பும் பொறுப்புணர்வும் இருந்தால் போதும், இறைப்பணி எளிதுதான்.
இயேசுவை பிடிக்கும். இயேசுவின் விழுமியங்கள், கொள்கைகள் பிடிக்கும். ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்கத்தான் மனம் விரும்புவதில்லை. “மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று மத்தேயு நற்செய்தியாளர் (20:28) பதிவு செய்கிறார். இறைமகனே இறங்கி வந்தது பணிபுரியவென்றால் அவரை பின்பற்றுகிற நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவரன்பில் பணியாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment