பொதுக்காலம் 16ஆம் வாரம்
25.07.2024 - புதன் கிழமை
நான் குடிக்க போகும் துன்ப கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா என்று இயேசு கேட்டு அந்த கேள்விக்கு "ஆம்" என பதில் சொல்லி கிபி 43 - 44 ஆம் ஆண்டுகளில் அதை நிறைவேற்றிக் காட்டினார் திருத்தூதர் யாக்கோபு.
கிபி 43 ஆம் ஆண்டு யூதேயாவை ஆண்டு வந்த ஏரோது அக்ரிப்பா உரோமை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த அபியத்தார் என்ற தலைமைக் குரு வழியாக யாக்கோபை கைது செய்யச் சொன்னார். அபியத்தார் என்ற அந்த தலைமை குரு தன்னுடைய பணியாளராகிய ஜோசியா என்பவர் வழியாக யாக்கோபு, கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து வந்தான்.
அவர்கள் யாக்கோபை இழுத்துக் கொண்டு வரும் வழியில் முடக்குவாதமுற்ற ஒருவர் இதைக் கேள்விப்பட்டு "யாக்கோபே என் மீது இரங்கும், என்னுடைய நோயை நலப்படுத்தும்" என்று கத்தினார்.
யாக்கோவும் அவர் மீது இரங்கி, "ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீ நலமாகு" என்று சொன்னார். இதை பார்த்துக் கொண்டிருந்த யாக்கோபின் கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்துப் போன ஜோசியா, ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெற்றார்.
இதைக் கண்ட தலைமைக்கு ஒரு அபித்தார் ஜோசியாவிடம் நீ கிறிஸ்துவை பின்பற்றுவதை விட்டுவிடவில்லை என்றால் நீயும் இந்த மனிதனோடு கொல்லப்படுவாய் என்றார். இதற்கு ஜோசியா எக்காரணத்தை கொண்டும் கிறிஸ்துவை பின்பற்றுவதை விட்டுவிட மாட்டேன் என்றார். இறுதியில் யாக்கோபோடு ஜோசியாவும் கொல்லப்பட்டார். இவ்வாறு தன்னுடைய இறப்பின் வழியாக யாக்கோபு இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.
இயேசுவின் பணி வாழ்வில் இயேசுவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் யாக்கோபு
1. தொழுகை கூட தலைவராகிய யாயிரின் மகளை இயேசு நலப்படுத்திய போது (மாற்கு 5:37-48)
2. இயேசுவின் தோற்ற மாற்றத்தின் போது (மாற்கு 9:28)
3. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்த போது திருத்தூதர் யாக்கோபு இயேசுவோடு இருந்தார்.
எருசலேமை நோக்கிச் செல்லும்போது புறஇனத்தார் அதிகம் வாழ்ந்த சமாரியா வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை போக விடாமல் தடுத்தனர். சினம் கொண்ட யாக்கோபு மற்றும் அவரது சகோதரர் யோவான், இயேசுவிடம், ஆண்டவரே வானத்திலும் தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? என்று கேட்டனர். துணிச்சல் மிக்கவர் யாக்கோபு.
இவர்தான் தன் தாயோடு வந்து இயேசுவின் அரசில் அமர இடம் கேட்டவர். தலைமை பொறுப்பில் ஆசைப்பட்டவர்.
ஆனால் இயேசுவின் இறப்பிற்கு பிறகு, தான் அனுப்பப்பட்ட இடத்திற்கு சென்று அந்த கிறிஸ்துக்காக தனது உயிரையே தியாகம் செய்ய துணிந்தவர்.
திருத்தூதர்களில் முதல் மறைசாட்சி புனித யாக்கோபு...
No comments:
Post a Comment