24_04

செயல்களிலாவது நம்பிக்கை வேண்டாமா?

27.04.2024 - சனிக் கிழமை

மரத்திற்காவது நம்பிக்கையுண்டு; அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்; அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்” - யோபு 14:7

செயலும் சொல்லும் இணைந்து பயணிக்கின்ற போது வாழ்க்கை நலமாய் அமையும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? (நம்பிக்கை குறைந்தவர்களை விட நம்பிக்கை குறைவுக்கு ஆளாக்குபவர்களுக்கே இங்கு ஆற்றல் இருப்பது போல இருக்கிறது).

நம்பிக்கை எங்கு குறைவுப்படுகிறதோ அங்கு வாழ்க்கை பலவீனப்பட்டு போகின்றது. கடவுள் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை, மற்ற மனிதர் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை, தன் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை. வாழ்க்கை ஏதோ செல்கிறது, நானும் பயணிக்கிறேன் என்று பயணம் செய்வோரும் உண்டு.

சாதாரணமாக செய்ய முடியாத ஒன்றை நம்பிக்கையினால் எளிதாக நடத்திக் காட்டியவர்களும் நமக்கு முன்னால் எடுத்துக்காட்டுகளாக இருக்கிறார்கள். நம் முன்னேற்றத்திற்கு தேவை நம்பிக்கை தான். தன்னால் முடியாது என்பவர்களை சிலந்தி கூட எளிதாக சிறைப்படுத்தி விடும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:7-14) தன் மீது நம்பிக்கை கொள்ளாத சீடருடன் இயேசு உரையாடுகிறார். என் வார்த்தைகளை நம்பாவிட்டாலும், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள், என்னில் நம்பிக்கை கொள்வோர் நான் செய்யும் செயல்களையும் செய்வார் என்கிறார் இயேசு. இயேசுவோடு இருந்தவர்களுக்கே இயேசுவை நம்புவதற்கு தயக்கம்.

இவர்களின் நம்பிக்கை குறைவு அடுத்த(வர்) செயலை செய்வதற்கு தடையாக இருக்கிறது. இந்த இடத்தில் இயேசு கோபப்படாமல், அவர்களின் நம்பிக்கையை மிகுதியாக்குகிறார். 

அவர்களின் நம்பிக்கையை செயலுள்ள நம்பிக்கையாக மாற்ற அவர் முயற்சி செய்கிறார்.

என் வாழ்வில் மற்றவர்கள் மீது நான் நம்பிக்கை இல்லாமல் வாழும்போது நான் என் அமைதியை இழந்து விடுகிறேன். மற்றவர்களின் செயல்களை கண்டாவது, யார் நம்பிக்கைக்குரியவர் உண்மையானவர்கள் என்பதை நாம் கண்டுக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை இல்லையேல் நம் வாழ்வு எளிதாக நகராது.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...