24_04

இயேசுவின் பெயர்!


இயேசுவின் பெயரில் தியானம்

தொடக்கப் பாடல் -1

இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள்


பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்

பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்


பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்

பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்


வானிலும் பூவிலும் மேலான நாமம்

வானாதி வானவர் இயேசுவின் நாமம்


நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்

நம்பினோரை என்றும் கைவிடா நாமம்


வாசிக்க… பிலிப்பியர் 2: 4-11


“ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்” - பிலிப்பியர் 2:10-11

இயேசு தம்மைத் தாழ்த்திக் கொண்டதால் கடவுள் அவரை மிகவே உயர்த்தினார். எப்படிப்பட்ட உயர்த்துதல் என்றால் மேலேயும் கீழேயும் வாழ்வோர் அனைவரும் அவரது பெயருக்கு மண்டியிடுவர். 

இயேசுவின் பெயருக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறது

நலம் கொடுக்கும்

பேதுரு அவரிடம் (கால் ஊனமுற்றோரிடம்), “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றி பிடித்து தூக்கிவிட்டார் - திருத்தூதர் பணிகள் 3:6-7

வலுவூட்டும்

இயேசுவின் பெயரே இவருக்கு (கால் ஊனமுற்றோருக்கு) வலுவூட்டியது - திருத்தூதர் பணிகள் 3:16

அடையாளங்கள் அருஞ்செயல்களை செய்யும்

உமது ஊழியர் இயேசுவின்  பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும் - திருத்தூதர் பணிகள் 4:30

துணிவு கொடுக்கும்

… பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார் - திருத்தூதர் பணிகள் 9:27

தூய்மையாக்கும்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள் - 1 கொரிந்தியர் 6:11

புத்துயிர் கொடுக்கும்

ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் உன் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும் - பிலமோன் 1:20

இத்தனை மதிப்பு மிக்கது இயேசுவின் திருப்பெயர். இன்று இயேசுவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களால் இயேசுவுக்கு மரியாதைக் கொடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி…


இன்று இந்த இயேசுவின் பெயரால் பல பிளவுகள் காணக்கிடக்கின்றன

1. கிறிஸ்துவின் பிள்ளைகளிடையே பிளவு (1 கொரிந்தியர் 1:10-17)

- கிறிஸ்துவின் பெயரால் திருத்தூதர் பவுல் கெஞ்சிக் கேட்கிறார்

- நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள்

- உங்களிடையே பிளவுகள் வேண்டாம்

- ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்

- நான் பவுலைச் சார்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சார்ந்தவன், நான் கேபாவைச் சார்ந்தவன், நான் கிறிஸ்துவைச் சார்ந்தவன் என்கிறீர்கள்

- கிறிஸ்து இப்படி பிளவுப்பட்டாரா?

- பவுலா உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றீர்கள்?

- நற்செய்தி அறிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் (1 கொரிந்தியர் 1:23 - நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்).

- 1கொரிந்தியர் 2: 2 “நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை”. 

இன்று கிறிஸ்தவர்களிடையே கிறிஸ்து பிளவுப்பட்டு இருக்கிறார். கிறிஸ்துவுக்கு பணிசெய்வதாக சொல்லிவிட்டு நாம் நம்முடைய பெருமைக்கான வழிகளைத் தேடிக் கொள்கிறோம். (“பெருமை பாராட்ட விரும்புகிறவர் அண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்” - 1 கொரிந்தியர் 1:31)

2. திருவிருந்தில் பிளவு (1கொரிந்தியர் 11:17-34)

- நீங்கள் சபையாகக் கூடி வரும்போது உங்களிடையே பிளவு இருக்கிறது.

- உங்களிடையே கட்சிகள் இருக்கின்றன

- நீங்கள் கொண்டு வரும் உணவை நீங்களே உண்டு விடுகிறீர்கள்

- சிலர் பசியோடு இருக்க, சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள்

- கடவுளின் திருச்சபையை இழிவுப்படுத்துகிறீர்கள்

- இயேசுவின் உடல், இரத்தம் என்று உணராமல் உண்கிறீர்கள், பருகுகிறீர்கள்

- ஒருவர் மற்றவருக்காக காத்திருங்கள்

தொடக்கக் கால திருஅவையி;ல் கிறிஸ்துவின் விருந்தில் பங்கெடுக்க அனைவரும் கூடி வருவது வழக்கம். அப்படி வருகின்ற வேளையில் அவர்கள் கொண்டு வருகின்ற உணவை பகிர்ந்துண்ண வேண்டும். அதுதான் கிறிஸ்துவின் திருவிருந்தில் பங்கெடுப்பதன் அடையாளம். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி பிளவை ஏற்படுத்திய மக்களை பவுல் கண்டிக்கிறார்.

3. இயேசு வெறுப்போர் பிளவை கொணர்வர் (மத்தேயு 10:34-39)

- நற்செய்திக்காக அதன் விழுமியங்களுக்காக இந்த பிளவு உண்டாகிறது

- இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்வோரை மற்றவர்கள் வெறுப்பர்

- இயேசுவின் பாதையில் பயணிப்போர் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவர்

- குடும்பத்தில் உள்ளவர்களே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிராக எழுவர்

- சிலுவை என்னும் பளுவை சுமக்காதவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே பிளவு இருக்கும்

- இயேசுவுக்காக இழப்பை சந்திப்போர் உயிரைக் காத்துக் கொள்வர்


பிளவை எதிர்க்கும் சக்தியாக நாம் மாற வேண்டும். நீதியின் பாதையில் நடப்பதால் எதிர்ப்பு வருகிறதா?  பிளவு வருகிறதா? மகிழ்ச்சி அடைவோம்… நாம் கிறிஸ்துவின் பாதையில் பயணிக்கிறோம்… துன்பத்தில் பங்கெடுக்கிறோம்… 

என் மீட்பர் வாழ்கின்றார் - யோபு 19:25 +  இயேசு உயிரோடிருக்கிறார் - லூக்கா 24:23

 


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...