02.04.2025 - புதன் கிழமை
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார் - ஆமோஸ் 5:14
சிலர் தங்கள் உள்ளத்தில் இவ்வாறு எண்ணிக் கொள்கிறார்கள் இறந்த பிறகு என்ன நடந்தா என்ன? இறந்த பிறகு யார் பார்க்க போகிறார்? இருக்கிற வரை எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு செல்வோம் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது.
இறந்த பிறகு இரண்டு வழிகள் உள்ளன 1. நீடித்த நிலையான வாழ்வு 2. தண்டனைத் தீர்ப்பு
இறந்த பிறகு மீண்டும் எப்படி இறக்க முடியும்?
அந்த இறப்பு என்பது கடவுளை விட்டு தொலை தூரத்தில் நிற்கும் நிலை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே அது தான் இந்த இறப்பு. கடவுளை காண முடியும், ஆனால்
இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு உண்டு. நல்லதை செய்தால் நல்லது கிட்டும், தீயது செய்தால் தீமை தான் வந்து விளையும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5: 17-30) தான் செய்த நன்மையை எதிர்த்த யூதர்களுக்கு இயேசு பதில் சொல்கிறார். இயேசு செய்த செயல் சரியாக இருந்தும் கூட யூதர்கள் அவரை துன்புறுத்தினார்கள்.
என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.
இறுதி நாளில் நாம் செய்த செயலுக்கேற்ற/வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏற்ப கைம்மாறு வழங்கப்படும். இயேசு செய்த நன்மையை பாராது ஓய்வு நாள் சட்டம் தான் பெரிது என்று சட்டத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மனித மாண்பை மறந்தார்கள் யூதர்கள்.
இன்றும் நாம் நன்மை செய்ய தவறும் போது, நன்மை செய்வோருக்கு இடையூறாக இருக்கும் போது நாம் கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு எதிராக செயல்படுகிறோம்.
கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் புதிய வாழ்வு உண்டு.
விண்ணகம் சார்ந்த வாழ்வு இம்மண்ணக வாழ்வில் தொடங்கப்பட வேண்டும்.
கிறிஸ்துவை நம்புகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் மட்டும் மகிழ்ச்சி காணாது அவரின் விழுமியங்களை நம்பிக்கை நிறைந்த செயல்களால் வெளிக் காட்டுவோம்.
நன்மை செய்து, நல்லவற்றுக்கு துணை நின்று விண்ணகம் வாழ்வை நமதாக்குவோம்.
No comments:
Post a Comment