25_04

நமது மறைமுக வாழ்க்கை...


தவக்காலம் 5ஆம் வாரம்

12.04.2025 - சனிக் கிழமை 

தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன் - திருப்பாடல்கள் 119:95

எல்லா மனிதரிடமும் மறைமுக வாழ்க்கையும் உண்டு, வெளிப்படையான வாழ்க்கையும் உண்டு. எல்லாவற்றையும் வெளிப்படையாக காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக எல்லாவற்றையும் மறைமுகமாக செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. 

சில காரியங்களை மறைமுகமாகத் தான் செய்ய வேண்டும், சில காரியங்களில் வெளிப்படைத் தன்மை கட்டாயம் தேவை.

சிலர், தாங்கள் செய்யக்கூடிய காரியங்களை பலர் பார்க்க வேண்டும் என்றும் பாராட்ட வேண்டும் என்றும் செய்வார்கள். 

சிலர் செய்ய வேண்டிய காரியங்களை சரியாக செய்துவிட்டு அமைதி காப்பார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 11: 45-57) பரிசேயர் தலைமைச் சங்கத்தாரை கூட்டி இயேசுவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள். இந்த சதித்திட்டம் வெளிப்படையாக திட்டம் தான். பலருக்காக ஒருவர் இறப்பது நல்லது என்று நயவஞ்சகமாக பேசினார்கள். இந்த வார்த்தைகளை கண்டு இயேசு மறைமுக வாழ்க்கை வாழவில்லை.

இவர்களின் மிரட்டலுக்கு பயந்து தலைமறைவாகவில்லை. தனது நேரம் இன்னும் வராததால் அவர் சில காலம் இவர்களிடமிருந்து விலகி இருந்தார்.

இயேசு தான் செய்த அனைத்தையும் வெளிப்படையாக செய்தார், போதித்தார். இதனால் கோவம் கொண்ட கயவர் கூட்டம் அவரை அழித்து விட எண்ணியது. 

மறைமுக சதி செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் ஒருவகையில் சொல்லப்போனால் அக்கயவர்கள் இயேசுவை வெளிப்படையாக எதிர்த்தார்கள்.

இன்று பல மனிதர்கள் நேரில் ஒரு மாதிரியாக, பின்னால் ஒரு மாதிரியாக பேசுகிறார்கள். நமக்கு எதுவும் தெரியாது என்று எண்ணி நடிக்கிறார்கள். இப்படிபட்ட மனிதர்களிடமிருந்து நாம் மறைமுக வாழ்க்கை வாழ வேண்டி இருக்கிறது.

மறைத்து மறைத்து பேசும் நண்பனை விட நேர்ப்பட பேசும் எதிரியே மேல்.

பொல்லாப் பகைவர் கூட்டம் நம்மை ஒழித்து கட்ட திட்டம் பல போட்டாலும் அவர் அசைவின்றி ஒன்றும் அசையாது. அழிக்க எண்ணுவோர் முன்னிலையில் எழுந்து ஒளி வீசுவோம். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...