25_04

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு...


தவக்காலம் நான்காம் வாரம் 

04.04.2025 - வெள்ளிக் கிழமை 

உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது - திருப்பாடல்கள் 91:7

நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். நேரம் வரும்வரை செயல்பட வேண்டும். கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும், அதை கடமைக்காக செய்யக் கூடாது, மாறாக கடமை உணர்வோடு செய்ய வேண்டும்.

சிலர் நேரத்தை தள்ளி போடுகிறார்கள். சிலர் நேரத்தை சேமிக்கிறார்கள். நேரத்தை தள்ளி போட்டால் நேரம் நம்மை தள்ளி போடும்.

சிலர், மற்ற மனிதர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். அதிக நேர வேலை சுமையை கொடுத்து, குறைந்த அளவு கூலியை கொடுத்து மற்ற மனிதரை சுரண்டுகிறார்கள். சிலர் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரியாமலேயே ஏமாற்றப்படுகிறார்கள். 

சிலர் சிலரை தீர்த்துக் கட்ட நேரம் குறிக்கிறார்கள். யார் நேரத்தை குறித்தாலும் நம் நேரம் வராமல் நாம் எங்கும் போக முடியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 7:1,210,25-30) இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

இயேசுவுக்கு ஒரு கூட்டம் நேரம் குறித்தது. படைத்தவருக்கே நேரம் குறிக்கப்படுகிறது. 

எதற்காக இயேசுவுக்கு நேரம் குறிக்கப்பட்டது? அவர் தனது கடமையை செய்தார், தந்தை கடவுள் தனக்கு கொடுத்த பணியை செய்தார். இயேசுவை அனுப்பியவர் உண்மையானவர், அவருக்கு இயேசு உண்மையாக இருந்தார். 

யூதர்கள் செய்த குற்றங்களை சுட்டிக் காட்டினார். இது அவர்களுக்கு இயேசுவின் மேல் வெறுப்பை தூண்டியது.

நற்செய்தி பதிவு செய்கிறது, "அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை." - யோவான் 7:30

இன்று நம் கதையை முடித்து விட பலர் துடிக்கிறார்கள். இவன்(ள்) நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்(ள்). நமக்கு சார்பாக இல்லாதவர்களை நாம் ஒழித்து விடுவது சரியென்று ஒரு கூட்டம் சதித்திட்டம் தீட்டுகிறது.

ஆயிரம் பேர் ஆயிரம் செய்தாலும் நம் நேரம் முடியும் வரை அவர்கள் சூழ்ச்சி நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

சதித்திட்டம் தீட்டுவோர் தீட்டிக் கொண்டே இருக்கட்டும். அவர்கள் விரிக்கும் கண்ணியில் அவர்களே சிக்கிக் கொள்வார்கள்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...