25_04

ஒளியின் பாதையில் நடப்போம்...


தவக் காலம் 5ஆம் வாரம்
07.04.2025 - திங்கட்கிழமை 

என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே; ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார் - மீக்கா 7:8

ஒளி - இருள், பள்ளம் - மேடு இவற்றில் நாம் தேர்ந்தெடுப்பது ஒளியும் மேடும் தான். ஆனால் நாம் அறிந்ததே இருளிலும் பள்ளத்திலும் விழுந்து விடுகிறோம். நல்ல வழிகாட்டி இல்லை, பக்கத்துணை இல்லை. எனவே நான் வழி தவறி விட்டேன் என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறோம். 

வழிதவறி நடப்பவர்கள் வழி தவறியவர்களுக்கு சரியான பாதையை காட்ட முடியாது. ஆனால் நான் தவறி விட்டேன் நீங்களும் தவறி விடாதீர்கள் என்று எச்சரிக்கலாம்.
நானே உலகின் ஒளி என்று சொன்ன இயேசுவின் அடிச்சுவட்டுகளை பின்பற்றி, நாமும் உலகின் ஒளியாக இருக்க அழைக்கப்படுகிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் 8: 12-20 இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்கிறார். 

ஒளியைக் கண்டுக் கொள்ளாதவர்கள், ஒளியை இழந்தார்கள். 

நம்முடைய வாழ்வில் நாம் ஏன் ஒளியை நிராகரிக்கிறோம்?
- நாம் செல்லும் பாதை தவறாக இருப்பதால்
- நாம் தீமைக்கு சான்று பகர்வதால்
- நம்முடைய தவறு வெளிப்பட்டு விடும் என்பதால்
- எப்போதும் நல்லவர்களாக இருக்க வேண்டும்/நன்மை செய்ய வேண்டும் என்பதால்

இயேசு ஒளியாக இருந்ததால் அவரை பலர் எதிர்த்தார்கள், குற்றம் சாட்டினார்கள், ஏற்றுக் கொள்ள தயங்கினார்கள்.

நாம் இவ்வுலகை சார்ந்தவர்கள் என்றால் ஒளியை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. 
ஆனால் நாம் அவ்வுலகை சார்ந்தவர்கள் என்பதால் ஒளியின் பாதையில் நடக்கவும், மற்றவர்களுக்கு ஒளியாக இருக்கவும் அழைக்கப்படுகிறோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...