24_02

கண்டு கொள்ள… கண்டு கொள்ளப்பட…


“அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்” – லூக்கா 10:33

நாம் பலவீனமானவர்கள். அன்பிற்கு அடிமையானவர்கள். ஒருவரின் மாய வலையில் (கண்மூடித்தனமான அன்பில்) விழுந்துவிட்டோம் என்றால், எத்தனை மருத்துவமனை சென்றாலும், மனநல நிபுணர்களிடம் சென்றாலும் நாம் இயல்பாக இருக்க முடியாது. அந்த வேளைகளில் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழும் கேள்விகள் - எனக்கென்று யார் இருக்கிறார்? யார் என்னை அன்பு செய்வார்? யார் என்னை கண்டு கொள்வார்? இது ஒரு வகையினர்.

கடன் சுமையினால் அவதிப்படக் கூடிய நிலையில் உள்ள ஒருவரின் உள்ளம், யாராவது என்னை கண்டு கொண்டு என் சுமையை குறைக்கமாட்டார்களா என்று ஏங்கும். இது வேறு வகையினர்.

உளவியல் சிக்கலோ பொருளாதாரா நெருக்கடியோ ஒருவரை அழுத்துகிறபோது, அவரில் எழும் கேள்வி எனக்கென்று யார் இருக்கிறார் என்பதுதான். 

இந்த வேளைகளில் நல்ல சமாரியர்கள் தேவைப்படுகிறார்கள். தன் நிலையிலிருந்து இறங்கி வந்து, அவல நிலையில் உள்ளவரை கண்டு கொள்வதற்கும் அவரை அந்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கும் நல்ல சமாரியர்கள் தேவை. 

“ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் என்பார்” - மத்தேயு 25:35,36. இத்தகையோரை கண்டு கொள்கிறபோது நாம் இயேசுவையே கண்டு கொள்கிறோம்.

தேவையில் இருப்போரை கண்டு கொள்வோம். இறைவன் நம்மை கண்டு கொள்வார்… 


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...