24_02

திறக்கப்படட்டும்…



“நான் யாரிடம் பேசுவேன்? யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்? யார் செவி கொடுப்பார்? அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை; அவர்களால் செவிகொடுக்க முடியாது; ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று; அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை” – எரேமியா 6:10

    திறக்கப்பட வேண்டி இருப்பது கதவுகள் மட்டுமல்ல காதுகளும் நாவுகளும் தான். இன்று உறவினர்களுக்கு கதவுகள் கடினப்பட்டு தான் திறக்கப்படுகிறது. கதவுகளே கடினப்பட்டு திறக்கப்படுகின்ற போது, எப்படி பேசுவதற்கு நாவுகளும் கவனிப்பதற்கு காதுகளும் திறக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. கடினப்பட்டிருக்கும் மனங்களும் திறக்கப்பட வேண்டும்.

    இன்றைய நற்செய்தி (மாற்கு 7:31-37) வாசகத்தில், காது கேளாதவரின் காதும் வாய் பேசாதவரின் நாவும் திறக்கப்படுகின்றன. திறக்கப்பட்டதும் நலம் பெற்றவர் தன் வாய் திறந்து இயேசுவின் நற்செய்தியை யாவரும் கேட்க உரக்க அறிவிக்கிறார். 

  இறைவார்த்தைக்கு செவிமடுக்க இயலாதவாறு நம் உள்ளங்களும் காதுகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருமுழுக்கு அருளடையாளத்தின் போது அருள்பணியாளர் குழந்தையின் காதிலும் நாவிலும் சிலுவை அடையாளம் வரைந்து சொல்லும் இறைவேண்டல், ‘காதுகேளாதவர் கேட்கவும் வாய்ப்பேசாதவர் பேசவும் ஆண்டவர் செய்தருளினார். நீ விரைவில் அவரது வார்த்தையை, தந்தையாகிய இறைவனின் புகழும் மகிமையும் விளங்க காதால் கேட்கவும் அந்த நம்பிக்கையை நாவால் அறிக்கையிடவும் அவரே அருள்செய்தருள்வாராக’.
    இன்றைய நாளின் நற்செய்தி தான் இதற்கு அடிப்படை. நம் காதுகள் திறக்கப்படுவதன் வழியாக நாம் கடவுளின் வார்த்தையை கேட்கவும் கேட்ட வார்த்தையை நாவால் அறிக்கையிடவும் அழைக்கப்படுகிறோம்.

    ‘நான் பெரிய செயல்களை செய்ய முடியாது. ஆனால், நான் என்னால் முடிந்த சிறிய செயல்களையெல்லாம் செய்ய முடியும். அவையெல்லாம் கடவுளின் மகிமைக்காகவே’ என்பார் புனித தோமினிக் சாவியோ.

நம் கதவுகளும் திறக்கப்படட்டும் கடவுளின் அதிமிக மகிமைக்காக…

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...