24_02

நாம் வலப்பக்கமா? இடப்பக்கமா?

 


"ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்து விடுவார்" - நீதிமொழிகள் 19:17

இவ்வுலகில் நல்லவர்களும் உண்டு தங்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொள்கிறவர்களும் உண்டு, தீயவர்களும் உண்டு சமூகத்தால் தீயவர்களாக மாற்றப்பட்டவர்களும் உண்டு. நல்லவர்கள் போல் தங்களை காட்டிக் கொள்கிறவர்களாலும் தீயவர்களாலும் இந்த சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை. 

ஆண்டவர் காயினிடம், "நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்றார். தொடக்க நூல் 4:7 

தாங்களும் நல்லது செய்வதில்லை நல்லது செய்வோரையும் நல்லது செய்ய விடுவதில்லை. இத்தகையோர் தான், இந்த சமூகத்தில் நலமோடு வாழ்கிறார்கள் என்ற பிம்பம் கொடுக்கப்படுகிறது. ஏழைகளை வஞ்சித்து, ஒடுக்கி, அவர்களிடம் இருப்பதை சுரண்டி வாழக்கூடிய அந்தக் கூட்டம் தான் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பது போல காட்டப்படுகிறது.  

நல்லது செய்யாவிட்டாலும் தீமையாவது (இடையூறு) செய்யாமல் இருக்கலாம். நல்லது செய்வோரையும் கெடுக்கிறது, நல்லது நடைபெறுவதையும் தடுக்கிறது கயவர் கூட்டம்.. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 25: 31-46) இயேசு இரண்டு பிரிவினரை சுட்டிக்காட்டுகிறார். ஒன்று வலப்பக்கத்தில் உள்ளோர் மற்றொன்று இடப்பக்கத்தில் உள்ளோர். என் சின்னஞ்சிறிய ஏழை சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் எதையெல்லாம் செய்தீர்களோ அவற்றையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று இயேசு சொல்கிறார். எவற்றையெல்லாம் செய்யாமல் விட்டு விட்டீர்களோ அதை எனக்கு செய்யவில்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார் / கண்டிக்கிறார். 

நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு நாம் நன்மை செய்கிறபோது, நாம் இயேசுவுக்கு நன்மை செய்கிறோம். நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு தீமை செய்கிறபோது, நாம் இயேசுவுக்கே தீமை செய்கிறோம்.

"நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்". - யாக்கோபு 4:17 

புனித அன்னை தெரசா சொல்வார், " உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒரு நபருக்காவது உணவு அளியுங்கள்"

மற்றவர்களுக்கு நன்மை செய்து, இயேசுவுக்கு கடன் கொடுப்போம், அவரது வலப்பக்கத்தில் அமர்வோம். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...