“பிள்ளாய்! எனக்குச் செவிகொடு; நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே” - நீதிமொழிகள் 5:7
செவிகள் உண்டு ஆனால் செவிசாய்ப்பதில்லை, நன்மைகள் செய்ய வாய்ப்புகள் உண்டு ஆனால் நல்லது செய்வதில்லை. செவிமடுக்காமல் இருப்பதால் காதுகள் நல்லதை கேட்க முடியாதவாறு நாளடைவில் அடைக்கப்படுகிறது. நல்லது செய்யாத காரணத்தால் நன்மைத்தனத்தை பெற முடிவதில்லை. கொடுத்தால் (செவிக்கொடுத்தால் அல்லது நல்லதைக் கொடுத்தால்) தானே பெற்றுக் கொள்ளமுடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6: 36-38) இயேசு 4 செயல்களுக்கு செவிமடுக்க அழைப்பு விடுக்கிறார். 1. பிறரை தவறாக தீர்ப்பளிக்க கூடாது 2. மற்றவர்களை கண்டனம் செய்ய கூடாது 3. மன்னிக்க வேண்டும் 4. நம்மிடம் இருப்பதை கொடுக்க வேண்டும்.
இரண்டு செயல்கள் எதிர்மறையானவை (செய்யக்கூடாதவை), இரண்டு செயல்கள் நேர்மறையானவை(செய்யவேண்டியவை). நாம் எதை விதைத்தோமோ அது நமக்கு வளர்ந்து பலன் தரும். அதை போலவே நாம் மற்றவர்களுக்கு செய்த செயல்கள் (நன்மையோ, தீமையோ) நம்மை பின்தொடரும் அல்லது நமக்கு திருப்பிக் கொடுக்கப்படும்.
அமைதியான உள்ளத்தினால் மட்டுமே நாம் கடவுளுக்கு எப்போது செவிமடுக்க முடியும். எப்படி பேறுபெற்றவராக முடியும்? செவிமடுத்ததை செயல்படுத்தும்போது தான் அது சாத்தியம்.
‘கடவுளுக்கு கீழ்ப்படிவது என்பது கடவுளுக்கு செவிமடுப்பதே. திறந்த மனதுடன் கடவுள் நமக்கு காட்டக்கூடிய பாதையை பின்பற்றுவதே செவிமடுப்பதாகும்’ - திருத்தந்தை பிரான்சிஸ்
அவருக்கு செவிமடுத்து அவருக்குரிய பாதையில் நடப்போம்
No comments:
Post a Comment