25_02

காணிக்கையாக நம்மை கொடுப்போம்...


02.02.2025 - ஞாயிற்றுக் கிழமை 

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் 

இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்” - விடுதலைப் பயணம் 25: 2

கடவுளுக்கு காணிக்கை தேவையா? கடவுளுக்கு எந்த காணிக்கை தேவை? கடவுளுக்கு காணிக்கை தேவையில்லை. சொல்லப்போனால் நாம் அவருக்கு கொடுப்பதெல்லாம் நாம் அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டது தான். (“கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை” – சபை உரையாளர் 5:19) 

நாம் கடவுளுக்கு எதையும் புதிதாக கொடுப்பதில்லை, மாறாக கடவுள் நமக்கு கொடுத்ததையே நாம் அவரிடம் திருப்பிக் கொடுக்கிறோம்.  

பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட காணிக்கைகளான தானியப் படையல்கள், நல்லுறவுக் காணிக்கைகள், அறியாமல் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள், பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள் (லேவியர் நூல் 2-5 அதிகாரங்கள்) போன்றவற்றை அடையாள முறையில் குரு மக்கள் சார்பாக கடவுள் முன் கொண்டு வருவார், அல்லது எரிபலியாக்குவார். இது அவர்கள் செய்த தவறுகளுக்கு ஈடாக செய்யப்பட்டவை. 

இத்தகைய பலிகளை, காணிக்கைகளை இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. (“சேபா நாட்டுத் தூபமும் தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை” – எரேமியா 6:20)

ஆனால் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நொறுங்கிய நெஞ்சம். பாவத்திற்கு மனம்வருந்தி பாவத்திற்கு பரிகாரம் செய்து கடவுளிடம் திரும்பி வர வேண்டும். (“கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை” – திருப்பாடல்கள் 51:17) கடவுளுக்கு ஏற்ற காணிக்கை மனம்மாறிய உள்ளமே!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருகென்று அர்ப்பணிக்கப்படும்" என்று காண்கிறோம்.. மனிதராக பிறந்த இயேசுவும் கோவிலில் அர்ப்பணிக்கப்படுகிறார்.

அர்ப்பணம்/காணிக்கை என்பது நாம் அவருக்கு சொந்தம் என்பதை சுட்டுகிறது.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...