பொதுக் காலம் 5ஆம் வாரம்
15.02.2025 - சனிக் கிழமை
எடுத்துக் கொள்ள அதிக மனம் இருக்கிறது, கொடுத்து வாழ தான் மனம் இல்லை. இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்ந்தாலே எல்லாம் நலமாகும்.
பரிவு இருக்கும் இடத்தில் பகிர்வு இருக்கும். பகிர்வு இருக்கும் இடத்தில் சமத்துவம் இருக்கும்.
நான் சேர்த்தது/நான் கஷ்டபட்டு சேர்த்தது இது எனக்கு மட்டும் தான், உழைக்காத நபருக்கு நான் ஏன் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா! எல்லா நபர்களும் சோம்பேறித்தனால் வறுமையில் வாடவில்லை, சில நபர்களின் தந்திரங்களும் சில நபர்களின் சூழ்ச்சியும் பலரை வறுமைக்கு தள்ளி உள்ளது.
இப்படி தேவையில் வாடுவோருக்கு இருப்பதை பகிரவில்லை என்றால் நாம் எப்படி கிறிஸ்துவை பிரதிபலிக்க முடியும்.
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:5 இல் சொல்லப்பட்டுள்ளது போல, "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!" அவரின் மனநிலை நம்மில் உருவாக வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:1-10) மக்கள் கூட்டத்திற்கு உணவளிக்க தன் சீடர்களை அழைக்கிறார். பாலை நிலத்தில் இவர்களுக்கு போதுமான உணவு அளிப்பது எப்படி கேட்ட சீடர்கள் மத்தியில் இருப்பதை பகிர சொல்கிறார் இயேசு.
போதுமா? என்று கேட்டார்கள், இறுதியில் 7 கூடைகள் நிறைய எடுத்தார்கள் என்று பதிவு செய்கிறது லூக்கா நற்செய்தி.
இருப்பதை பகிரும் போது நாம் அறியா நேரத்தில் இன்னும் அதிகம் கொடுக்கப்படும் என்பதை இப்பகுதி நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
இருக்கிறவர்கள் இல்லாதவர்களோடு இருப்பதை பகிர்வதே கிறித்தவம்.
ஒளி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது என்றால் அது ஒளியை இழப்பதில்லை, மாறாக இருப்பதை பகிர்கிறது. நாமும் நம்மிடம் இருக்கும் வளங்களை/ஆற்றல்களை பகிர்ந்து கொடுப்போம்.
No comments:
Post a Comment