25_02

பேறுபெற்றோர் ஆவது எப்போது?

பொதுக்காலம் 6ஆம் வாரம் 

16.02.2025 - ஞாயிற்றுக் கிழமை 

"இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்" - பாரூக்கு 4:4

யாரை நமக்கு மிகவும் பிடிக்கும்? நம்மை போற்றக் கூடிய மனிதர்களை. யாரை நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம்? நம்மை புகழ்ந்து பேசுபவர்களை/நம்மை மதிப்பவர்களை.

இவ்வுலக மனிதரிடமிருந்து புகழ்ச்சியையும் பெருமையையும் தேடுகிறோம். சாதாரண அற்ப மனிதர் தரக்கூடிய புகழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றால், நம்மை உருவாக்கிய, நம்மை செதுக்கிய கடவுள் தரக்கூடிய அந்த புகழ்ச்சி என்பது எத்துனை மேலானது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:17,20-26) இயேசு 3 வகையான பேறுபெற்றோரை, 3 வகையான கேடுற்றோரை பதிவு செய்கிறார் லூக்கா நற்செய்தியாளர். (ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர், பட்டினியாய் இருப்போரே நீங்கள் பேறுபெற்றோர், அழுதுக் கொண்டிருப்போரே நீங்கள் பேறுபெற்றோர்).

இந்த பேறுபெற்றோரில் நாம் எத்தகையோர் என்பதை சிந்திக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் பேறுபெற்றோர் என்ற நிலையில் இருக்கிறோமா? அல்லது இழப்புக்களை, துயரங்களை மற்றவர்களுக்கு கொடுத்து மற்றவர்களை பேறுபெற்றோராக மாற்றிக் கொண்டிருக்கிறோமா! என்பதும் சிந்திக்கத்தக்கது.

கிறிஸ்தவ வாழ்வு மட்டும் துன்பம் நிறைந்தது அல்ல, கிறிஸ்துவில் வாழ்வோருக்கும் துன்பம் உண்டு.

கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள் வேறு, கிறிஸ்துவை பிரதிபலிப்பவர்கள் வேறு. 

கிறிஸ்துவை சார்ந்தவரை உலகம் வெறுக்கும். ஏனென்றால் கடவுளுக்குரியதை உலகு வெறுக்கும்.

இழப்புக்களை மற்றவர்களுக்கு கொடுப்பவர்கள் எப்படி பேறுபெற்றோராக முடியும். கிறிஸ்து தன்னை இழந்தார் நம்மை பேறுபெற்ற மக்களினமாக மாற்றி விட்டார்.

கடைக்கு சென்று துணி துவைக்கும் சோப்பு ஒன்றை வாங்குகிறோம். அதை அப்படியே பயன்படுத்தாமல் வைத்து விட்டால் துணியில் உள்ள அழுக்கு போகுமா? நிச்சயம் போகாது. சோப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.

கடவுள் கொடுத்த வாழ்க்கையும் அப்படி தான். பேறுபெற்ற மக்களினம் என்ற கொடை அவர் கொடுத்த வாழ்க்கை. அதில் நிலைத்து நிற்பதும், மற்றவரை நிலைத்திருக்க வைப்பதும் நம் செயல்களில் இருக்கிறது.

உலகின் பார்வையில் பேறுபெற்றவராக அல்ல, உன்னதரின் பார்வையில் பேறுபெற்றோராய் வாழ்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...