26.02.2025 - புதன் கிழமை
"தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே" - நீதிமொழிகள் 24:28
இங்கு பலர் நல்லதை செய்து பலருக்கு எதிராக/எதிரியாக இருக்கிறார்கள். எதிரியாக யாரும் விரும்புவதில்லை, ஆனால் எதிரியாக்கப்படுகிறார்கள்.
யாருக்கும் எதிராக இருக்க வேண்டாம் என்றால் யார் எதை செய்தாலும் கண்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதல்ல அதன் அர்த்தம். தவறை சுட்டிக் காட்டி விட்டு கடந்து சென்று விட வேண்டும். திருந்துவதும் வருந்துவதும் அல்லது அவர் அப்படியே இருப்பதும் அவர் பாடு...
எதிராக இருப்பதன் இன்னொரு அர்த்தம் யாருக்கு எது நடந்தாலும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதும் தான். அடுத்தவர் எப்படி போனால் எனக்கு என்ன என்பது? அடுத்தவரின் வளர்ச்சிக்கு தடையாய் இருப்பதே, அடுத்தவரின் வளர்ச்சியை எதிர்ப்பதே.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9: 38-40) என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார் என்று யோவானிடம் சொல்கிறார் இயேசு.
இங்கு எதிராக இராதவர் என்பது ஒரே மனநிலை கொண்டிருப்பவரை குறிக்கிறது. நல்லது செய்பவர்களை இயேசு தடுத்து நிறுத்தவும் இல்லை, தீயது செய்தவர்களை அவர் கண்டுக் கொள்ளாமலும் இல்லை.
இயேசு தீமைக்கு எதிராக இருந்தார், தீயவர்களுக்கு அல்ல. இயேசு தீமையை எதிர்த்தார், தீயவர்களை அல்ல.
நல்லவர்கள் சார்பாகவும் தீமைக்கு எதிராகவும் இருக்க வேண்டும்.
நல்லது செய்பவர்களை தடுக்கும் மனநிலை ஒருபோதும் நம்மிடம் இருத்தல் ஆகாது.
No comments:
Post a Comment