08.02.2024 சனிக் கிழமை
மனிதர்கள் ஓய்வின்றி உழைக்கிறார்கள். உழைத்த பின் சேமிப்பு பற்றி பயம் ஏற்படுவதால் உள்ளத்தில் ஓய்வின்றி இருக்கிறார்கள்.
சிலர் உழைக்க வேண்டிய பருவத்தில் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் உழைத்து முதுமையில் ஓய்வு எடுக்கிறார்கள்.
ஓய்வு அவசியம் தேவை. தலைக்கு மேலே சேமித்து சேமித்து என்ன ஆக போகிறது. ஓய்வின் அவசியம் தெரியாததால் பலர் ஓய்வு எடுப்பதில்லை, மற்றவரை ஓய்வு எடுக்க விடுவதில்லை.
தனக்கு கீழ் பணியாற்றும் மனிதர்களுக்கு பரிவு காட்டும் தலைவர், அவர்களை மதிப்பதன் அடையாளமாக தகுந்த நேரத்தில் ஓய்வு கொடுத்து வேலை வாங்குவார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:30-34) தனது சீடர்கள் ஓய்வின்றி பணி செய்ததால் அவர்கள் ஓய்வு எடுக்க தனித்திருக்க அனுப்புகிறார். தன் சீடர்களின் உணர்வுகளை இயேசு மதித்தார்.
அதே வேளையில் ஆயன் இல்லா ஆடுகளாய் இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பரிவுக் கொள்கிறார்.
தேவைக்கு இறங்குபவர், ஆறுதல் அளிப்பவர் இயேசு.
நம் உணர்வுகளை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று எண்ணுகிற நாம் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க தொடங்குவோம்.
பரிவு காட்டி பரிவு பெறுவோம்...
No comments:
Post a Comment