25_02

தொடுதல் நலமளிக்கிறது...


பொதுக் காலம் 5ஆம் வாரம்

10.02.2025 - திங்கட் கிழமை 

"அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்" மாற்கு 8:22

பல்வேறு வகையில் நலம் பெறுகிறார்கள் மனிதர்கள். அவற்றில் ஒன்று தான் தொடுதல். 

இரக்கம் உள்ள மனிதர்கள் இறங்கி வருவார்கள். மற்ற மனிதர்களை அன்பொழுக நோக்குவார்கள். மற்றவர்களோடு உடன் இருந்து தொட்டு ஆறுதல் அளிப்பார்கள்.

பரிவோடு தொடுதல் ஒரு இரக்கச் செயலே. 

இது ஒரு புறம் இருக்க தன்னை தொட மற்றவரை அனுமதிப்பது சமத்துவத்தின் அடையாளமே. 

தீண்டாமை ஒரு கொடுஞ்செயல். தொட்டால் தீட்டு, அருகில் வந்தால் தீட்டு என்ற குற்ற செயல் இன்னும் தொடரத்தான் செய்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில்  (மாற்கு: 6-53-56) அவர் (இயேசு) சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர். அந்த அளவுக்கு தொட்டால் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. 

இயேசுவும் அவர்களை தொட அனுமதிக்கிறார். நற்செய்தி பதிவு செய்கிறது அவரை தொட்ட அனைவரும் நலமடைந்தனர் என்று.

தொடுதல் நலம் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு தொட்டால் நலம் நிச்சயம். 

நல்ல தொடுதல் நல்வாழ்வு கொடுக்கும். நாம் யாரையும் தீட்டாக கருதாது இருப்பதே நாம் நலம் பெறுவதற்கான முதல் படிநிலை.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...