25_02

தேவையற்றவைகளை உதறித் தள்ளுங்கள்...


பொதுக் காலம் 4ஆம் வாரம்

06.02.2025 - வியாழக் கிழமை 

தேவை, தேவையில்லாதது இவை இரண்டும் சரியான நேரத்தில் சரியான முறையில் புரிந்துக் கொள்ளபட வேண்டும். தேவையானவர்களை தேவை அற்றவர்களாக கருதுவதும் தேவை இல்லாதவர்களை தேவை என்று கருதுவது தவறு. 

தேவைக்கு பயன்படுத்துவது என்பது வேறு; தேவை என்பது வேறு. ஆழ்கடலில் பயணம் செய்யும் போது அதிக சுமை தேவையில்லை, தேவையான குடிநீர், உணவு போதுமானது. பாலைவனத்தில் பயணம் செய்யும் போது குடிநீர் போதுமானது.

இப்படி இடத்திற்கு ஏற்றார் போல தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டால் எல்லாம் சரியாகும். இது உறவுக்கும் உணர்வுக்கும் பொருந்தும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:7-13) இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்து பணி செய்ய அனுப்புகிறார். பணி செய்ய சில பரிந்துரைகள் முன் வைக்கப்படுகிறது. உணவு, பை, செப்புக் காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டாம், அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும். நற்செய்தியை அறிவித்து நோயாளிகளை குணமாக்குங்கள். 

இந்த பயணத்தில் சீடர்கள் தேவையற்றவற்றை எடுத்துச் செல்லாதிருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பாதை சரியாய் இருந்தால் பயணம் சரியாய் அமையும். இலக்கு தெளிவாய் இருந்தால் நம் வாழ்க்கை நலமாய் அமையும். தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டால் எல்லாம் சரியாய் நடக்கும்.

இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மேலும் சொல்லக்கூடிய அறிவுரை, 'உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறி விடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'.

நற்செய்தி அறிவிப்பு நோயுற்றோர் நலம் பெறுதல் தான் அனுப்பப்படுதலின் நோக்கமாக இருந்தது.

நமக்கான சவால்

தேவையற்ற குப்பை நமக்கு எதற்கு?

செய்ய வேண்டியதை செய்தல் வேண்டும்

நம் வாழ்வு பிறர் வாழ்வு பெற உதவ வேண்டும் 

வார்த்தை செயல் பிறருக்கு நலம் கொடுக்க வேண்டும் ...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...