பொதுக் காலம் 5ஆம் வாரம்
09.02.2025 - ஞாயிற்றுக் கிழமை
தகுதியை யாரும் விலைக் கொடுத்து வாங்க முடியாது. தகுதி தானாகவும் வராது. தகுதியற்ற நிலையில் இருந்த/இருக்கும் நம்மை இறைவன் தகுதிப்படுத்துகிறார்.
நம்முடைய தகுதி இறைவனிடம் இருந்தே வருகிறது. கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:5 இவ்வாறு சொல்கிறது, "நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது."
இன்று பல மனிதர்கள் தங்கள் தகுதியற்ற நிலையை உணர்ந்துக் கொள்வதில்லை. நூற்றுவர் தலைவர் கொண்டிருந்த மனநிலை நமக்கு தேவை. (மத்தேயு நற்செய்தி 8:8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.)
தகுதியற்ற நிலையை உணர்தல் என்பது தாழ்வு மனப்பான்மையை குறிப்பதல்ல, மாறாக அது தன் நிலையை உணர்தல்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா தன் தகுதியற்ற நிலையை உணர்ந்ததால் ஆண்டவரின் பணி செய்ய தகுதியுடையவர் ஆகிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தனது அழைப்பை திரும்பி பார்க்கிறார். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்த்தவர். கிறித்துவால் தொடப்பட்டவர் கிறிஸ்துவை பற்றி அறிவிக்க ஆரம்பிக்கிறார்.
தன்னை உணர்ந்தவர் தன்னை கடந்து பிறர் பணி செய்ய வேண்டும். அதன் வழியாக தான் நமது தகுதி வெளிப்படும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.
தன்னால் முழு முயற்சி செய்யப்பட்டும் பலன் கிட்டவில்லை. இறைவார்தையில் நம்பிக்கை கொண்டு நடந்தால் பலன் உண்டு என்பது தெளிவாகிவிட்டது.
மனிதரை பிடிப்பவர் ஆகிவிட்டார். தகுதி கடவுளிடமிருந்து தகுதி வெளிப்பட்டு விட்டது.
நாம் எந்நிலையில் இருக்கிறோம் இருக்கிறோம் என்பதை யோசித்து பார்ப்போம்.
நம் தகுதியற்ற நிலையை நாம் உணர்ந்ததால் தகுதிப்படுத்தப்படுவோம்.
நாம் நம் நிலையை உணர வேண்டும்.
No comments:
Post a Comment