பொதுக் காலம் 7ஆம் வாரம்
27.02.2025 - வியாழக் கிழமை
"எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை" - 2 கொரிந்தியர் 6:3
பாதையில் நடக்கிறோம் இடையில் பெரிய கல் ஒன்று இடையூறாய் இருக்கிறது என்றால் அதை அப்படியே விட்டு விட்டு கடந்து செல்ல மாட்டோம். ஓரமாக போட்டு விட்டு தான் செல்வோம்.
திரும்பி வருகிற போது அது மீண்டும் நமக்கு தடங்களாக இருக்கலாம் அல்லது மற்ற நபர்களுக்கு அது இடையூறாக இருக்கலாம் என்பதால் அதை நீக்கி விடுவோம்.
எல்லா மனிதருடைய வாழ்க்கையிலும் எல்லா நிரந்தரம் அல்ல. நிரந்தரம் என்று நாம் எண்ணிக் கொண்டு இருப்பது எல்லாமே தற்காலிகம் தான்.
தற்காலிக வாழ்க்கையிலும் பல இடையூறுகள் இருக்க தான் செய்கின்றன. நம்முடைய வாழ்க்கையில் எது அவசியமோ அதை விட்டு விடுகிறோம், எது தேவையில்லையோ அதை நாம் பற்றிக் கொள்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:41-50) என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது என்கிறார் இயேசு.
நிலை வாழ்வுக்கு, இறையாட்சிக்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் நீக்கிவிட இயேசு பணிக்கிறார்.
நிலைவாழ்வுக்கு முழு உடல் அவசியமல்ல, மாறாக முழு ஆன்மாவும் தூயதாய் இருக்க வேண்டும்.
பலி பொருள் உப்பால் தூய்மை பெறுவது போல நாம் நெருப்பால் தூய்மை அடைய வேண்டும்.
அந்த நெருப்பு நம்மில் இருக்கும் கசடு என்னும் இடையூறுகளை அகற்றும்.
நல்லவர்களை போல காட்டிக் கொள்வதை யாரும் செய்யலாம். நல்லவர்களாக, நன்மை செய்பவர்களாக வாழ்வது தான் இங்கு அவசியம்.
நம் வாழ்வு நமக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி இடையூறாக அமைந்துவிட கூடாது.
கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் நன்மைத்தனம் வெளிப்பட தீமை என்னும் இடையூறுகள் அளிக்கப்படும்... அதற்கு முன் நாம் நம்மை சரி செய்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment