பொதுக்காலம் 17ஆம் வாரம்
01.08.2024 - வியாழக் கிழமை
"தீயோர் தண்டிக்கப்படுவதை நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்; அவர்கள் தம் பாதங்களைப் பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்" - திருப்பாடல்கள் 58:10
இவ்வுலகம் எல்லாவற்றையும் இணைத்து வைத்திருக்கும், அவ்வுலகம் நல்லோரையும் தீயோரையும் பிரித்து வைத்திருக்கும். தீமைக்கு அவ்வுலகில் இடமில்லை.
ஆடுகிறவரைக்கும் ஆடிக்கொள்ளலாம் இங்கு. கண்ணுக்கு தெரியாத அவ்வுலகத்தை பற்றி ஒன்றும் தெரியாத போது, ஏன் கவலைக் கொள்ள வேண்டும்? என்று எண்ணுகிறோம்.
கடவுள் இருக்கிறாரா? என்று சிலரும் கடவுள் என்ன செய்திடுவார்? என்று சிலரும் கடைசில உள்ளத கடைசில பார்த்துக்கலாம் என்று சிலரும் தப்புக் கணக்கு போடுகின்றனர்.
உண்டு குடித்து மகிழ் (Eat and Make Merry) என்பது தான் நம் விருதுவாக்காக இருக்கிறது.
உண்டு மகிழ்வது தவறல்ல... நம்மிடம் உள்ளதைக் கொண்டு நன்மை செய்யாமல் இருப்பது தான் தவறு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு13:47-53) விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டு வரும் வலைக்கு ஒப்பிடப்படுகிறது. தேவையில்லாத மீன் கெட்டதாக கருதப்பட்டு வெளியே எறியப்படும்.
அதே போல தான் உலக முடிவிலும் நிகழும். நல்லோரும் தீயோரும் பிரிக்கப்படுவர். தீயவர்கள் தீச்சூளையில் தள்ளப்படுவர்.
கற்றுக் கொண்டதையும் பெற்றுக் கொண்டதையும் வாழ்வாக்க வேண்டும். செவிக் கொடுத்தாலும் செயல்படுத்த வேண்டும்.
உரோமையர் 8-35 இவ்வாறு சொல்கிறது, "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?.
நாம் அவரோடு ஒன்றுப்பட்டிருந்தால், எதுவும் நம்மை அவரிடமிருந்து பிரிக்காது.
நம் உடலிலிருந்து ஆவியும் ஆன்மாவும் பிரியும் முன் தீமைகள் நம்மிலிருந்து தூக்கி எறியப்படட்டும்.
No comments:
Post a Comment