25_05

பணியாளரும் பேறுபெற்றவரே!!!


பாஸ்கா காலம் 4ஆம் வாரம்

15.05.2025 - வியாழக்கிழமை 

மக்களின் நடுவர் எவ்வாறோ அவருடைய பணியாளர்கள் அவ்வாறே; நகரத் தலைவர் எவ்வழியோ, அவ்வழி நகர மக்கள் - சீராக்கின் ஞானம் 10:2

பணியாளர் தலைவர் இடையே இடைவெளி உண்டு. செய்யப்படும் பணியின் அடிப்படையில் அல்லது ஒருவருக்கு கீழ் பணி செய்வதால் ஒருவர் அடங்கி போக வேண்டி இருக்கும். 

பொதுவான புரிதலில் யாரும் யாரையும் விட மதிப்புக் குறைந்தவர் அல்ல. இன்று மதிப்பு எப்படி பார்க்கப்படுகிறது? ஒருவரின் பணத்தின் அடிப்படையில், ஒருவரின் அதிகாரத்தின் அடிப்படையில் தான்.

ஆனால் தகுதி, திறமை ஒருவரின் மதிப்பை கூட்டிக் காட்டும். கீழான பணி செய்தாலும் அவரிடம் இருக்கும் ஆற்றலின் அடிப்படையில் அவர் மதிப்புக்கு உரியவரே. அதே சமயத்தில் தன்னிடம் திறமை இருக்கிறது என்பதற்காக தன்னை விட பெரியவர்களையோ, தன் தலைவர்களையோ ஏளனமாக பார்க்க கூடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 13: 16-20) பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

ஒரு பணியாளர் பேறுபெற்றவர் ஆவது முதலில் அவர் தன்னிலை உணர்தலில் தொடங்குகிறது. தன்னிலை உணர்ந்து தன் பணி செய்பவர் மதிப்புக்கு உரியவர்.

எக்காரணத்தை முன்னிட்டும் நமக்கு தொடர்பில்லாத காரியங்களில் மூக்கை நுழைக்க கூடாது. தன்னை சரிப்படுத்த இயலாதவர் எப்படி அடுத்தவரை சரிப்படுத்த முடியும். 

தலைவர் வழிநடத்தும் இடத்தில் இருக்கும் காரணத்தினால் பணியாளர் அவருக்கு பணிந்து தனது கடமைகளை சரிவர செய்ய வேண்டும். (தலைவரும் தன்னை எல்லோரையும் விட உயர்ந்தவராக எண்ணி விட கூடாது, வல்லவனுக்கு ஒரு வல்லவன் இருப்பான்).

நமது கடமைகளை உணர்ந்து நமது பணிகளை சரிவர செய்வோம். நாம் செய்யும் பணி நமது மதிப்பை கூட்டட்டும், நம்மை பேறுபெற்றவராக மாற்றட்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...