25_05

எதுக்கு அன்பு செய்யணும்?


பாஸ்கா காலம் 5ஆம் வாரம்

18.05.2025 - ஞாயிற்றுக் கிழமை 

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்; ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள் - செக்கரியா 7:9

இந்த உலகம் அன்பால் சூழப்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரிந்தவர்களை மட்டும் அல்ல, கண்ணுக்கு தெரியாத எங்கோ இருக்கக் கூடிய மனிதர்கள் மீதும் நாம் பரிதாப்படுகிறோமே அது அன்பு.

இந்த உலகில் இரண்டு வகையான அன்பு இருக்கிறது. 1. உண்மையான அன்பு 2. போலியான அன்பு

1. உண்மையான அன்பை காண்பது அரிது. உண்மையான அன்பை எல்லோரும் விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இறுதிவரை உண்மையான அன்பை காட்டுவதில்லை.
2. போலியான அன்பு என்று தெரிந்தும் கூட இன்று பலர் ஏமாந்துக் கொண்டே இருக்கிறார்கள். தற்காலிக சுகம் அதில் கிடைப்பதால் இந்த ஏமாற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 

அன்பு என்ற ஒன்றை இந்த உலகில் இருந்து தூக்கி விட்டால் நாம் அனைவரும் இயந்திரம் தான்.

அன்பினால் காயமும் உண்டாகும்; அந்த அன்பே காயத்திற்கு மருந்தாகும். 
காயப்படுத்தும் நபர்களே கட்டு போடுவார்கள், சிலர் காயப்படுத்தி விட்டு கடந்து செல்வார்கள்.

சில மனிதர்கள் தந்த காயம், வலி சிலரை இறுதிவரை வெறுப்புணர்வுக்கு அழைத்துச் சென்று விடுகிறது.
யாரோ செய்த தவறுக்கு எல்லோரையும் எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 13: 31-33a, 34-35) ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்கிறார் இயேசு.

எல்லா மனிதர்களும் இந்த உலகில் அன்பை பெறுவதில்லை. சிலருக்கு அளவுக்கு மீறி அன்பு கிடைக்கிறது. சிலருக்கு அன்பு இறுதியில் ஏமாற்றதை கொடுக்கிறது. 
அன்பு சிலரை அனாதை ஆக்கியிருக்கிறது (பெற்றோர் பிள்ளைகள் மேல் கொண்ட அன்பு).

இப்படி இருக்கும் சூழலில் எப்படி அன்பைக் காட்டுவது? என்ற கேள்வி எழுகிறது.
அன்பில் எதிர்பார்ப்பு இருக்க கூடாது. அன்பில் எதிர்பார்ப்பு இருந்தால் அது ஏமாற்றதை தான் தரும். 

அன்பை விதைத்து கொண்டே இருக்க வேண்டும். பலன் நமக்கு கிடைத்தாலும் சரி இல்லை அடுத்தவருக்கு கிடைத்தாலும் சரி என்ற நோக்கில் செயல்பட வேண்டும்.
அன்பு நோயை குணமாக்கும், தீமையை வேரறுக்கும், புனிதப்படுத்தும், நம்பும், நம்பிக்கை கொடுக்கும், நல்வழிபடுத்தும்.

இயேசுவை போல அன்பை விதைப்போம். எதிர்பார்ப்புகளற்ற அன்பாய் நம் அன்பு மாறட்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...