பாஸ்கா காலம் 3ஆம் வாரம்
06.05.2025 - செவ்வாய்க் கிழமை
சிலரின் வார்த்தை ஜாலம் பலரை மயக்கி இருக்கிறது. வார்த்தைகளினால் பலரை பலர் கவர்ந்திருக்கிறார்கள். சிலரின் வார்த்தைகள் உண்மை போன்று தோன்றும் ஆனால் போலியானது. சிலரின் வார்த்தைகள் ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கும் ஆனால் அதுவே நல்வாழ்வுக்கு உகந்தது.
சிலரின் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. சிலர் எப்போது பேசுவார்கள்? என்று இருக்கும், சிலர் எப்போது பேசி முடிப்பார்கள் ? என்று இருக்கும்.
பேசும் விதங்கள் தான் நமக்கான நண்பர்களை பெற்றுக் கொடுக்கிறது. பேசியது போல செயல்படுவது தான் நம் நண்பர்களை தக்க வைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6: 30-35) இயேசு மக்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.
உணவு உயிர்க்கு ஆற்றல் தருவது தான், ஆனால் அழியக் கூடிய உணவை விட வேறொரு ஆற்றல் மிக்க உணவு ஒன்று உண்டு என்றால் அது இயேசுவின் வார்த்தை.
அழுகின்ற போது சில மனிதர்களின் வார்த்தை ஆறுதல் தருகிறது.சாதாரண மனிதர்களின் வார்த்தைக்கே இவ்வளவு என்றால் உண்டு என்றால் நம்மை படைத்து இயக்குபவரின் வார்த்தைக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டும்.
ஆறுதலிக்கும் வார்த்தைகள் அற்பமான உணவை விட மேலானது.
எல்லோருக்கும் பேசும், புரிய வைக்கும் திறமை கிடையாது.
இறைவன் அத்தகைய ஆற்றலின் வாயிலாக நம்மை நிறைத்திருந்தால் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
வார்த்தையினால் மற்றவர்களுக்கு வலு ஊட்டுவோம்.
No comments:
Post a Comment