25_05

கடவுளின்/மனிதரின் எண்ணங்கள் வேறு...


பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

09.05.2025 - வெள்ளிக் கிழமை 

எல்லா மனிதர்களின் எண்ணங்களும் ஒன்றல்ல. எல்லா மனிதர்களும் ஒன்றாக சிந்திப்பது இல்லை. நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுவோர் மத்தியில் தீமையை விதைப்போரும் உண்டு. 

சில மனிதர்கள் செய்த காரியங்களை குறித்து அறியப்பட்ட செய்தியைக் கொண்டு இறுதிவரை அவரை கெட்டவராக பார்ப்பவரும் உண்டு. கெட்டவர் தன் சார்பாக செயல்பட்டால் அவரை நல்லவராக தூக்கி பிடிப்பவரும் உண்டு.

எனக்கு ஏற்றார் போல செயல்பட்டால் மற்றவர் நல்லவர், எனக்கு எதிராக செயல்பட்டால் கெட்டவர். தான் செய்வது தவறு என்றாலும் தன் சார்பாக மனிதர்கள் இருக்க வேண்டும் என்று மூளை சொல்லத் தான் செய்கிறது.

ஒருவர் கெட்டவர் என்பதை ஒரு நிமிடம் தீர்மானித்து விடும். ஒருவர் நல்லவராக பார்க்கப்படுவதற்கு பல வருடங்கள் தேவைப்படும். 

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 9: 1-20) சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார் என்பதையும் அதே மனிதர் பவுலாக மாறி, அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.

இதற்கு இடையில் பார்வை இழந்த சவுல் பார்வை பெற, அனனியா கடவுளால் அனுப்பப்படுகிறார். ஆனால் அனனியாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்று அனனியா சொல்ல, ஆண்டவரோ "அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக் காட்டுவேன்” என்றார்.

மனிதரின் எண்ணங்கள் கடவுளின் எண்ணங்களில் இருந்து மாறுபட்டவை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர், ஆனால் கடவுளோ அகத்தை பார்க்கின்றார்.

நாம் மாறிவிட்டோம் என்பது மனிதருக்கு தெரியாது, மனிதரால் நம்ப முடியாது. ஆனால் கடவுளுக்கு எல்லாம் தெரியும்.

நம் எண்ணங்களை அவர் சீர்தூக்கி பார்க்கிறார்.

திருப்பாடல்கள் 139:2

நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.

திருப்பாடல்கள் 139:7

உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?

திருப்பாடல்கள் 139:6

என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.

இறைவன் நம்மை ஆய்ந்து அறிந்திருக்கிறார்... அவர் பார்வையிலிருந்து நாம் மறைவாக இல்லை.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...