25_05

ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு...

இயேசுவின் விண்ணேற்ற பெருவிழா

01.06.2025 - ஞாயிற்றுக் கிழமை 

சில நேரங்களில் மனதுக்குள் எழும் கேள்விகள், எதுக்கு இந்த வாழ்க்கை? ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கணும்? நல்லவர், பொல்லாதவர் இருவருமே இறக்கின்றனரே? செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடைசியில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாமோ?

வாழ்க்கையை குறித்த கேள்விகள் நம்மை வியப்புற செய்கின்றன. 

மண்ணகம், விண்ணகம், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்வு என்று எதை எதையோ கேள்விப்படுகிறோம். வாழ்க்கை குழப்பமாக இருக்கிறதே என்று சிரமப்பட்டுக் கொள்வோரும் உண்டு.

மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வை பெறுவதற்கான முன் சுவை. மண்ணகத்தில் நாம் வாழும் நேரிய வாழ்க்கை முறை தான், விண்ணகத்தில் நமக்கு கதவுகளை திறந்து விடும்.

நல்லவர், பொல்லாதவர் இருவருமே இறப்பது உண்மை தான், இருவரும் தீர்ப்பு பெற உயிர்தெழுவதும் உண்மை தான். 

நல்லவர் நிலைவாழ்வு பெற உயிர்த்தெழுவர், பொல்லாதவரோ தண்டனைத் தீர்ப்பு பெற உயிர்த்தெழுவர். 

மண்ணகத்தை கடந்த நிலைவாழ்வு பெற இவ்வுலக தீமையிலிருந்து நாம் கடந்துச் செல்ல வேண்டும்.

இயேசுவின் விண்ணேற்றம் என்பது கடப்பு நிலை. இயல்பான நிலையிலிருந்து முன்னோக்கி செல்வது. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற உலகிற்கு மனிதராக வந்தவர், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி அதை நமக்கு விட்டு சென்றிருக்கிறார். 

நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, இந்த கடப்பு நிலை நோக்கி பயணிக்க, உலகிலிருந்து விண்ணகம் நோக்கி செல்வதற்கான பயணத்தில் இருக்கிறோம்.

இவ்வுலகம் நமக்கு நிரந்தரமானது அல்ல, இவ்வுலகம் ஒரு தற்காலிகமான நிலை தான்.

இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன் தனது அதிகாரத்தையும் தன் ஆற்றலையும் தன்னுடைய சீடர்களோடு பகிர்ந்து கொடுத்தார். அது இன்று நம்மோடு பகிரப்பட்டுள்ளது. 

இழப்பு இல்லாத முன்னேற்றம் இல்லை... கடப்பு இல்லாத வெற்றி இல்லை...

பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு/ பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கு கடந்துச் செல்வோம். தேக்க நிலை அல்ல; தெளிவான மனநிலை கொள்வோம்.

இயேசுவின் விண்ணேற்றம் நம் உள்ளத்தையும் முன்னேற்றட்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...