25_05

சான்று பகர்தல் சவால் நிறைந்தது...


பாஸ்கா காலம் 6ஆம் வாரம் 

26.05.2025 - திங்கட்கிழமை

என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது; என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது - யோபு 29:11

நமக்கு பிடித்தவர்களை குறித்து நாம் அதிகம் பேசுவோம். பிடித்தவர்களை அதிகம் அறிந்துக் கொள்ள ஆசைப்படுவோம். வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் அந்த நபரை குறித்து பேசிக் கொண்டே இருப்போம்.

அது வரைக்கும் என்றால் அந்த நபரை பிடிக்கும் வரை மட்டும் தான். அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு வர ஆரம்பித்து விட்டால், நேர்மறையாக பேசியது எதிர்மறையாக மாறும். 

யாரை குறித்து நன்கு பேசினோமோ? அவரை குறித்து தவறாக பேச ஆரம்பிப்போம்.

சான்று பகர்தலில் இரண்டு வகை உள்ளது. 1. நேர்மறை சான்று 2. எதிர்மறை சான்று

சில சமயங்களில் சான்று பகர்ந்தால் சாவு நிச்சயம். இலக்கு தெளிவு உள்ளவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15: 26- 16: 4) "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்" என்கிறார் இயேசு.

இங்கு சான்று பகரும் நபரால் பிரச்சினை இல்லை சான்று பகரும் நபருக்கு தான் (உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது).

இயேசுவை ஏற்றுக் கொண்டால் அவரின் விழுமியங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். விழுமியங்களை ஏற்றுக் கொண்டால் அதற்கு வார்த்தையாலும் வாழ்க்கையாலும் சான்று பகர வேண்டும்.

எதிர்ப்பு உண்டு, தடை உண்டு ஆனால் நம் இலக்கோ அவரை குறித்து எடுத்துச் சொல்வதாக மட்டும் இருக்க வேண்டும். 

நம்பிக்கை இழந்து விடாமல், காலம் வரும் வரை அவரை குறித்து அறிவிப்போம்... சான்று வாழ்வு வாழ்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...