25_05

இருப்பதை கொண்டு நிறைவு/மகிழ்ச்சி

பாஸ்கா காலம் 6ஆம் வாரம்

30.05.2025 - வெள்ளிக் கிழமை 

எது மனிதருக்கு நிறைவு தரும்? ஒவ்வொரு மனிதருடைய தேவையும் வித்தியாசமனது. ஒவ்வோர் மனிதரின் தேவை முடிந்த பிறகும் அடுத்த தேவை ஆரம்பமாகும். 

தேவையானது கொடுக்கப்பட்டாலும் அடுத்த தேவையை நோக்கி நம் கால்கள் நகர தான் செய்யும்.

நம்முடைய தேவைக்காக நாம் மற்றவர்களை சார்ந்து இருப்போம். சில நேரங்களில் கேட்டு கேட்டு அலுத்து போய் கேட்பதை நிறுத்தி விடுவோம். கேட்டது கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். 

எப்போது நாம் நமக்குரியவர்களிடம் கேட்பதை நிறுத்துவோம். இனி கிடைக்காது என்கிற போது/கேட்டது பெற்றுக் கொண்ட பிறகு. ஆனால் இது தற்காலிகம் தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:20-23) இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.” என்கிறார் இயேசு.

இது போதும் என்கிற மனம் எப்போது வருகிறதோ அப்போது யாரிடமும் எதுவும் கேட்க மாட்டோம். 

அந்த முழு நிறைவை நோக்கி/ முழு மகிழ்வை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

நிலையில்லா உலகில் எதுவும் நிறைவு தருவதில்லை. நிறைவு தருவதாக இருந்தாலும் அது நிரந்தரமாக தங்குவதில்லை. 

நிறைவு தராத ஒன்று துயரத்தை தான் கொடுக்கும். இன்றைய கால கட்ட மனித உறவுகள் அதற்கு உதாரணம். 

எதையும் எதிர்பாராத, எதையும் (பிறர் பேசிய வார்த்தை, பிறர் தந்த காயம்) எளிதாக ஏற்றுக் கொள்ளாத மனம் தான் பக்குவப்பட்டது.

நம் மகிழ்ச்சியை நாமும் கடவுளும் தான் தீர்மானிக்க வேண்டும். 

சாமுவேல் இரண்டாம் நூல் 24:14 இவ்வாறு சொல்கிறது, “நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழவேண்டாம்” ...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...