25_05

அறிதல்/புரிதல் குறைவு...


பாஸ்கா காலம் 4ஆம் வாரம் 

17.05.2025 - சனிக் கிழமை 

காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை - எசாயா 1:3

பொதுவாகவே மனிதர்களிடம் தன்னை பற்றிய அறிதலும் பிறரை பற்றிய அறிதலும் குறைவாக தான் இருக்கும். எந்த மனிதரும் தன்னை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதில்லை. (அப்படி அறிந்துக் கொள்வது மிக மிக கடினம்) தன்னை அறிந்தவன் மட்டுமே தன்னிலையை கடந்துச் செல்வான். பிறரை அறிந்துக் கொள்ள முற்படுவான்.

தன்னையே அறிந்துக் கொள்ள இயலாதவர் எப்படி மற்றவரை அறிந்துக் கொள்ள முடியும்? 

நமக்கு ஒரு இடத்தில் அதிக ஆர்வம் உண்டு. பிறரின் குறைகளை மட்டும் அறிந்துக் கொள்ள.

மனித வாழ்வில் குறைகளும் உண்டு நிறைகளும் உண்டு. குறைகளை மட்டும் பார்த்து அதை பெரிதுப்படுத்தினால் நிறைவை கண்டுக் கொள்ள முடியாது. 

என்னிடம் உள்ள குறைகளை நான் என்றாவது பெரிதுப்படுத்தியது உண்டா? நிச்சயம் இல்லை. அருகில் இருப்பவரை அறிந்துக் கொள்ள முற்பட வேண்டும். (கணவன், மனைவி, பிள்ளைகள் இடையே இன்று விரிசல் அதிகம் உள்ளது).

அறிந்துக் கொள்ள முற்படுதல் அன்பினால் தூண்டப்பட வேண்டும். அரைகுறை அன்பும் ஆபத்தானது தான்.

சிலர் சில மனிதர்களை அணுகி வருவார்கள், நெருங்கி பழகி தனக்கு தேவையான காரியங்களை கறந்துக் கொள்வார்கள். காரியம் முடிந்ததும் கலைந்து போய் விடுவார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14: 7-14) இயேசு தம் சீடரை நோக்கி: “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்கிறார். பிலிப்போ தந்தையை எங்களுக்கு காட்டும் என்று சொல்ல, பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும் என்று சொல்கிறார் இயேசு.

இயேசுவோடு இருந்தவர்களில் இயேசுவை புரிந்துக் கொண்டவர் யாரும் இல்லை என்று சொல்லலாம். இயேசு எதை போதித்தார்? என்ன போதித்தார்? எப்படி போதித்தார்? என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.

ஒருவர் மற்றவரை புரிந்துக் கொள்ள இருவரும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும்.

விருப்பு வெறுப்புகளை கடந்து இணைந்து செல்ல வேண்டும். அப்படிப்பட்ட குடும்பம் தான் இறையாற்றல் பெற்ற குடும்பமாக திகழ முடியும்.

மற்றவரை முழுவதுமாக அல்ல, முடிந்த அளவாவது புரிந்துக் கொள்ள முயலுவோம். நான் விரும்புவது போல மற்றவர் இருக்க வேண்டும் என்பது தவறு; மாறாக, மற்றவரை அவர் இருப்பது போல ஏற்றுக் கொள்வதே புரிந்துக் கொள்தலின் தொடக்கம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...