25_05

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?


பாஸ்கா காலம் 4ஆம் வாரம் 

16.05.2025 - வெள்ளிக் கிழமை

அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார் - எசாயா 35:8

எங்கே போகிறோம்? அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் நிதானம் இழந்து விடக் கூடாது. 

வாழ்க்கையில் பல தடைகள் முன்வைக்கப்படும். அதற்கு நாம் துணிந்து நிற்க வேண்டும். துணிந்து நிற்க நம் கால்கள் நிலையாக இருக்க வேண்டும்.

அடுத்தவர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்? என்பது தான் நமது தேடலாக இருக்கிறது. அடுத்தவரை பார்த்து கொண்டிருந்தால் நம் கால்கள் தடம் புரளும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14: 1-6) என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள் என்று இயேசு சொல்ல, தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். 

ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்? என்பது தோமாவின் கேள்வி. நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்? என்பது அடுத்த கேள்வி.

இயேசுவின் பதில், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்பது தான். 

வழி மாறியவர்களுக்கு இயேசுவே வழியாக இருக்கிறார்.

வாழ்க்கையில் தடம் புரண்டவர்களுக்கு அவரே உண்மையாக இருக்கிறார். 

வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணுபவர்களுக்கு அவரே வாழ்வாக இருக்கிறார்.

பலர் இயேசுவை விட்டு, இயேசுவின் விழுமியங்களை விட்டு வெளியே போய் விடுகிறார்கள். அலைந்து திரிந்து ஊதாரித் தனமாக வாழ்ந்து விட்டு, எங்கோ தொலைந்து போய் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் ஓய்ந்த பிறகு திரும்பி வர முடியாமல் இருக்கிறார்கள். நாம் செய்த செயல்களுக்கு மன்னிப்பு உண்டா? நம்மை அவர் ஏற்றுக் கொள்வாரா? என்ற சந்தேகத்தோடு தூர நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போது? எங்கே? நாம் தொலைந்தோம் என்பதை உணர்ந்தாலே நாம் திருந்தி/திரும்பி வந்து விடுவோம்.

ஆண்டவர் எங்கும் போகவில்லை. நாம் தான் அவரை விட்டு போய்க் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை பெற்று திரும்பி வருவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...