15.06.2025 - ஞாயிற்றுக் கிழமை
புரியாத புதிர், ஆனால் உணர்ந்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. அறிவுக்கு எட்டாத தமதிருத்துவம். எப்படி மூன்று நபர்கள் ஒரே கடவுளாக இருக்க முடியும்?
இறையியல் மேதையான புனித அகுஸ்தின், ஒருநாள், ஆழ்ந்த சிந்தனையோடு கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். இறைவன், மூன்று ஆட்களாய், அதேவேளையில், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று, தன் மூளையைக் கசக்கிப்பிழிந்து, விடை தேடிக்கொண்டிருந்தார். கடற்கரையில், ஒரு சிறுவன், சிறியதொரு சிப்பியில், கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இவ்வாறு நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும், அந்தக் குழிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்" என்றான். அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியுமா?" என்று கேட்டார். அச்சிறுவன், அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு, அளவுகடந்த கடவுளை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்துபோனான்.
நமக்கும் அதே பதில் தான்...
புரிந்துக் கொள்ள இடமில்லை... உணர்ந்துக் கொள்ள இடமுண்டு...
No comments:
Post a Comment