25_06

நம் செல்வம் எங்கே???

பொதுக்காலம் 11ஆம் வாரம்

20.06.2025 - வெள்ளிக் கிழமை 

நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்போர் தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும் கௌதாரி போன்றோர்; தம் வாழ்நாள்களின் நடுவிலேயே அவர்கள் அச்செல்வத்தை இழந்துவிடுவர்; இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர் - எரேமியா 17:11

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பார்கள், ஆனால் செல்வமும் செல்வத்தின் மீதான பற்றும் எல்லா துன்பங்களுக்கும் காரணம். 

செல்வம் தேவையில்லை என்பது இயேசுவின் கருத்து அல்ல. செல்வம் மட்டும் போதும் என்பது சரியானது அல்ல என்பது தான் இயேசுவின் கருத்து.

செல்வத்தை சேர்க்கும் ஆர்வத்தில் சிலர் தன்னிடம் இருக்கும் செல்வத்தை (உறவுகளை) இழந்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பது போதாது என்று இருப்பதற்கும் மேலாக, இருப்பதையும் (நேரம், உறவு) இழந்து சிலர் நிலையற்ற செல்வத்தை தேடி ஓடுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:19-23) மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள் என்று சொல்கிறார் இயேசு.

செல்வத்திற்காக அற்ப உயிர்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மனித உயிர்களை விட பணமும் செல்வமும் சிலருக்கு பெரிதாக தெரிகிறது. 

நம்பிக்கை துரோகங்கள் அதிகம் அரங்கேறுவது இந்த செல்வத்திற்காக தான்.

இது உலக செல்வம், இது அழிந்து போய்விடும். அழியா மற்றொரு செல்வமும் இருக்கிறது, அது நாம் செய்யும் நற்செயல்கள். நாம் செய்யும் நற்செயல்கள் வாயிலாக நமக்கான செல்வங்கள் விண்ணகத்தில் சேர்த்து வைக்கப்படும்.

அதை யாரும் பெரிதாக எண்ணுவதில்லை. இவ்வுலக செல்வங்களே எல்லோருக்கும் பெரிதாக தெரிகிறது. மடியில் கணம் இருப்பதால் வழியில் பயத்தோடு அலைந்து திரிகிறோம்.

அழிவற்ற நிலை வாழ்வு தரும் செல்வத்தை பெற இவ்வுலகில் நற்செயல்கள் புரிவோம். நமக்கான செல்வத்தை விண்ணகத்தில் சேர்ப்போம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...