திருவழிபாடு ஓர் அறிமுகம்...
ஆங்கிலத்தில் - Liturgy
கிரேக்கம் - LAOS மக்கள் + URGOS பணி/சேவை
தொடக்கக் காலங்களில் LEITUROS என்ற கிரேக்க சொல், அரசு அதிகாரிகள் மக்களுக்கு செய்யும் பணி என்று அழைக்கப்பட்டது.
நாளடைவில் திருஅவை பணியாளர்கள் செய்யும் ஆன்மீக பணி / வழிபாட்டுப் பணியை / இறை பணியை குறிக்க திருஅவையில் பயன்படுத்தப்பட்டது.
சில கேள்விகள் ???
1. வழிபாடு இன்று எப்படி இருக்கிறது?
2. இயேசு விரும்பும் வழிபாடு இங்கு நடைபெறுகிறதா?
3. வழிபாடு அதன் அருள் தன்மையை இழந்து இருக்கிறதா?
4. யார் இதற்கு காரணம்?
5. யார் மாற்ற வேண்டும்?
திருவழிபாடு - பொருள்
1. தந்தைக்கு மாட்சி அளிப்பது.
இது தந்தைக்கு நமது உடலின் வழியாக செலுத்தும் நன்றியும், வாழ்த்தும், புகழ்ச்சியும், ஆராதனையும் மன்றாட்டும் ஆகும்.
யார் வழியாக ? நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ...
2. இது மறையுடலின் வழிபாடு
தலையாகிய கிறிஸ்துவின் அவரது மறையுடலாகிய திருச்சபையும் ஒன்றிணைந்து செலுத்தும் வழிபாடு.
3. இது கிறிஸ்துவின் குருத்துவ பணியின் தொடர்ச்சி...
முப்பெரும் பணி - போதிக்கும் பணி, புனிதப்படுத்தும் பணி, வழிநடத்தும் பணி.
இந்த 3 பணிகளையும் நாம் அருளடையாள கொண்டாட்டங்களில் பங்கு பெறும் போது செய்கிறோம்.
4. இது இறைமாட்சியும் மனித மீட்பும் நல்குவது...
5. இது பாஸ்கா கொண்டாட்டம்
கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து, கொண்டாடி, நிகழ்காலப்படுத்தி உடனிருக்க செய்து செயல்படுத்துவதே
திருவழிபாடு - உட்கூறுகள்
1. திருப்பலி
2. அருள்சாதனங்கள்
3. திருப்புகழ்மாலை
1. திருப்பலி - இயேசுவின் வாழ்வு, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுக் கொண்டாட்டம்
2. அருள்சாதனங்கள் - கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு என்னும் பாஸ்கா மறைநிகழ்விலிருந்து ஊற்றெடுக்கும் அருளை நம் உள்ளத்தில் பொழியும் வெளி அடையாளங்கள் (தொடக்க காலங்களில் திருமுழுக்கு உறுதிப்பூசுதல், நற்கருணை பெற 3 ஆண்டுகள் தயாரிக்க வேண்டும்)
இப்போது சிறப்பு திருமுழுக்கு, சிறப்பு நற்கருணை என்று வழிபாடு அர்த்தம் இழந்து நிற்கிறது.
3. திருப்புகழ்மாலை - இறைவனை திருப்பாடல்களால் புகழும் மாலை. (இதில் திருப்பாடல்கள், செபம், வாசகம், பதிலுரை பாடல்கள், மன்றாட்டு என பல பகுதிகள் இடம் பெறுகின்றன).
இந்த 3 வகையான திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கு உறுதுணையாக பக்க பலனாக இருப்பவை இரண்டு காரியங்கள்
1. அருள்கருவிகள் - கிறிஸ்தவ வாழ்வின் பல்வேறு நிலைகளையும் சூழ்நிலைகளையும் மனிதர் பயன்படுத்தும் அனைத்தையும் புனிதப்படுத்த திருச்சபை பயன்படுத்தும் கருவிகள் (எ.கா: தீர்த்தம், சாம்பல், மெழுகுதிரி, செபமாலை, சிலுவை, திருப்படங்கள்)
2. திருவழிபாட்டு ஆண்டு
திருவழிபாட்டு ஆண்டு 52 வாரங்களை உடையது. முதல் திருவருகைக் கால ஞாயிறு தொடங்கி திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், ஆண்டின் பொதுக் காலம் (1), தவக் காலம், பாஸ்கா காலம், ஆண்டின் பொதுக் காலம் (2) என்ற காலங்களை கடந்து கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு பின்வரும் சனிக் கிழமையோடு திருவழிபாட்டு ஆண்டு நிறைவடைகிறது.
இதன் நோக்கம் முதல் வருகையை தியானிக்க, இரண்டாம் வருகையை எதிர்நோக்கி இருக்க
திருவழிபாட்டின் நோக்கம்
1. இறைவனுக்கு மாட்சி அளித்தல்
திருவழிபாட்டின் முதன்மையான நோக்கம் இறைவனுக்கு மாட்சியும் ஆராதனையும் செலுத்துவது தான். சொல்லப்படும் செபங்கள், பாடல்கள், விவிலிய வாசகங்கள், வழிபாட்டு முறை அனைத்தும் இறைவனுக்கு நன்றி கூறி அவரை புகழ
2. மனிதருக்கு மீட்பு அளிக்க
இறைவனை புகழ்ந்து போற்றும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழியாக மனிதரின் ஆன்மா இறைவனை நோக்கி எழும்புகிறது.
திருப்பலி நூலில் தொடக்கவுரை 4இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, " நாங்கள் உம்மைப் புகழ்ந்துரைப்பதால் உமது மாட்சிமை ஏற்றம் பெறாது எனினும், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நாங்கள் மீட்படைய அது பயன்படுகிறது.
3. மறைக்கல்வி அளித்தல்
முன்னுரை, வாசகங்கள், விளக்கவுரைகள், மறையுரைகள், திருச்சடங்குகள், செபங்கள் வாயிலாக திருவழிபாடு மக்களுக்கு மறைக்கல்வி அளிக்கிறது.
4. கிறிஸ்தவ சமூகத்தைக் கட்டி எழுப்புதல்
இறைமக்கள் திருவழிபாட்டில் பங்குபெறும்போது தான், நாம் ஒரே குடும்பம், சமூகம், கிறிஸ்துவின் மறையுடல் என்பதை வெளிப்படுத்துகின்றனர். சகோதர அன்பு, பகிர்வு, ஒற்றுமை பரவ வேண்டும்.
கேட்கப்பட வேண்டிய கேள்விகள்
இன்று பங்கில் திருவிழா தொடங்க போகிறது என்றால் இவையெல்லாம் தேவைப்படுகிறது?
மிக முக்கியத்துவம் எவை?
முக்கியத்துவம் எவை?
இன்று வழிபாடு அர்த்தம் இழந்து காணப்படுகிறது... முக்கியத்துவம் பெற வேண்டியவை பின்னுக்கும் முக்கியத்துவம் அல்லாதவை முன்னுக்கும் வந்துள்ளன...
வழிபாடு சீர்படுத்தப்பட வேண்டும்...
துணை நின்ற நூல் - திருவழிபாடு ஓர் அறிமுகம்,
ஆசிரியர் - அருள்திரு. எஸ். ஆரோக்கியராஜ்
No comments:
Post a Comment