25_06

மிகுதியாக பேசாதே!!!


பொதுக்காலம் 10ஆம் வாரம்

14.06.2025 - சனிக் கிழமை 

நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது; வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது - நீதிமொழிகள் 4:24

சில மனிதர்கள் பேச பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம், சில மனிதர்கள் எப்போது பேசுவதை நிறுத்துவார்கள் என்று இருக்கும். இரண்டு வழிகளில் இதை நாம் வகைப்படுத்தலாம் 1. கருத்துச் செறிவின் அடிப்படையில் 2. நமக்கு பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள் என்பதன் அடிப்படையில்.

பேசி பேசி பிறர் வாழ்வை அழித்தவர்களும் உண்டு, பேசி பேசி சாதித்தவர்களும் உண்டு... 

அதிக எண்ணிக்கையில் ஆட்கள் இருக்கும் போது அதிகம் பேசுவோர் அதிகம் சாதிப்பதில்லை. சிலர் எதற்கு எடுத்தாலும் ஆணையிடுவார்கள், நான் சொல்வது உண்மை என்பார்கள். எதற்காக இப்படி சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை கிடையாது. 

நம்முடைய நடைமுறை வாழ்வில் உண்மையை உண்மை என்று எடுத்துச் சொல்வதற்கு தான் போராட வேண்டியிருக்கிறது. பொய் எப்படியும் அரியணை ஏறி விடும். பொய்க்கு இங்கு விளம்பரம் தேவையில்லை. உண்மையை காக்க போராட வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5: 33-37) நீங்கள் பேசும் போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது என்கிறார் இயேசு.

எதன் மீதும் ஆணையிட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். 

நமது வார்த்தையிலும் வாழ்க்கையிலும் உண்மையும் தூய்மையும் நேர்மையும் இருந்தால் நாம் யாரையும் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நாவிலும் நடத்தையிலும் தூய்மை இல்லாதவர்கள் தான் மற்றவர்கள் ஆதரவுக்காக, மற்றவர்களின் காலை பிடிக்க வேண்டியிருக்கும்.

பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டியதை மட்டும் பேச வேண்டும். பேச தேவையில்லாத இடத்தில் அமைதி காக்க வேண்டும். 

அதிகம் பேசுவது அதிக ஆபத்தை கொண்டு வரும்.

குறைவாக பேசுவோம், அதிகம் கேட்போம், விரைவாக செயல்படுவோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...