25_06

நம் பணியை குறித்து பெருமிதம் கொள்வோம்...


பாஸ்கா காலம் 7ஆம் வாரம்
03. 06.2025 - செவ்வாய்க் கிழமை 

உங்கள் கண்களாலேயே இதைக் காண்பீர்கள்; கண்டு இஸ்ரயேலின் எல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாட்சி மிக்கவராய் இருக்கிறார் என்று சொல்வீர்கள்.” - மலாக்கி 1:5

எல்லா மனிதர்களும் அவரவர் தகுதிகேற்ப பணி செய்வார்கள். ஒவ்வோர் மனிதரும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து அதில் வெற்றியைக் காணும் போது அதில் அவர் பெருமிதம் கொள்வார், அப்பணியால் அவருக்கு பெருமை தான். 

அலுவலகத்தில் பணி செய்யும் நபர்களிடையே அடிக்கடி மனத்தாங்கல் ஏற்படும், இதற்கு காரணம் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சரிவர செய்து தனக்கு மேல் உள்ளவர்களிடம் பாராட்டு பெற வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது. 

எப்படியாவது முதலிடம் பெற வேண்டும் என்ற ஆர்வம் எல்லோரிடமும் இருப்பதில்லை. அப்படி ஆர்வத்தோடு செயல்படுபவர்களை சிலர் நெருக்கடிக்கு உள்ளாக்குவார்கள்.

தடை வருமென்று பின்வாங்குவோரும் உண்டு, தடை வந்தாலும் தொடர்ந்து போராடுவோரும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 17:1-11) நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும் என்று வேண்டுகிறார் இயேசு.

தனக்கு கொடுக்கப்பட்ட பணியை இயேசு திறம்பட செய்ததால் மகிழ்ச்சி அடைந்தார். தந்தை கடவுளை மாட்சி அடைய செய்தார். 

சில நேரங்களில் நமக்குரியதை சரிவர செய்து அடுத்தவர் காரியத்தில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது. தவறுகளை சுட்டிக் காட்டுவது வேறு, தவறுகளை மட்டும் காண்பது வேறு.

அதிகாரம் ஆளுமை செய்யும் இடத்தில் வளர்ச்சிக்கு இடமில்லை. ஆணவம் தலை தூக்கும் இடத்தில் பகிர்வு மனப்பான்மைக்கு இடமில்லை.

நம் பணிகள் நம்மை பெருமைப்படுத்தட்டும். நம் செயல்கள் கடவுளை மாட்சிப்படுத்தட்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...