06.06.2024 - வியாழக் கிழமை
"ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை" - திருப்பாடல்கள் 51:16
அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை. அன்பிற்கு பதிலாக/நிகராக எந்த ஒரு பொருளையோ, பொன்னையோ வைக்க முடியாது. அன்பு செய்வோரை, அன்பினால் மட்டுமே நிறைவுற செய்ய முடியும்.
சிலருக்கு பொன்/பொருள் மீது அன்பு இருக்கிறது, சிலருக்கு மனிதர்கள் மீது அன்பு இருக்கிறது, சிலருக்கு பதவி மீது அன்பு இருக்கிறது, சிலருக்கு உலக காரியங்கள் மீது அன்பு இருக்கிறது. அன்பில்லாமல் யாரும் இயங்கவில்லை.
ஆனால் அந்த அன்பு உண்மையானதாக, ஆழமானதாக இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
அரைகுறை அறிவு ஆபத்து என்பது போல, அரைகுறை அன்பும் ஆபத்தானது.
சிலருக்கு சில இலக்குகள் முடிவடையும் வரை சிலர் மீது இனம் புரியாத அன்பு இருக்கிறது. தன் காரியங்கள் நிறைவேறியவுடன் அந்த அன்பு நிராகரிக்கப்படுகிறது. இது மனிதர்களிலும் விலங்கினங்களிலும் உண்டு. (சில தேவைகள் முடியும் வரை சிலர் தேவை/ சிலரின் தேவை).
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:28-34) இயேசு இரண்டு வகை அன்பை சுட்டிக்காட்டுகிறார். 1. கடவுள் மீது அன்பு செலுத்துவது 2. மற்றவர்களை அன்பு செய்வது. இந்த இரண்டு நிறைவேற வேண்டும் என்றால் ஒருவர் தன்னை அன்பு செய்ய வேண்டும். தன் அன்பு இல்லையேல் பிறர் அன்பு இருக்காது.
தன்னை அன்பு செய்கிறவர், தன்னையே கடவுளுக்கு பலியாக கொடுக்கிறார். தன்னை அன்பு செய்கிறவர், தன்னலம் பாராது பிறர் நலனில் அக்கறை கொள்கிறார்.
இறையாட்சியை நெருங்குவதற்கு அன்பே அடிப்படையாக இருக்கிறது.
ஆயிரம் பொன்னும் பொருளும் பலியாக கொடுக்கப்பட்டாலும் அங்கு அன்பு இல்லையேல் அவை அனைத்தும் வீணானதே.
அன்பை பலியாய் கொடுப்போம், அன்பில் புத்துலகு படைப்போம்.
No comments:
Post a Comment