24_09

கவனிப்பும் மன்னிப்பும்...

 


பொதுக் காலம் 24ஆம் வாரம்

19.09.2024 - வியாழக் கிழமை

மேலோட்டமான கவனிப்பு மேலோட்டமான அன்பு இதுதான் இந்த உலகம் நம்மிடம் காட்டக்கூடியது. அக்கறை இருப்பது போல அன்பு செய்வது போல இந்த உலகம் போலியான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. 

யார் உண்மையான அன்பு கொண்டிருக்கிறாரோ, அவர்தான் அடுத்தவர் நலன் மீது அக்கறை கொள்வார். பெற்றோர்கள் குழந்தைகள் வளர்கின்ற போது அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்த பிறகு பிள்ளைகள் பெற்றோர் மீதான கவனிப்பை அடுத்தவரிடம் திணிக்க ஆரம்பிக்கிறார்கள். மூத்தவர் இளையவரிடம் அல்லது இளையவர் மூத்தவரிடம் அல்லது இருவரும் முதியோர் இல்லத்திடம் பெற்றோரை கவனிக்க கொடுத்து விடுகிறார்.

ஆதாயம் இருக்கும் வரை அன்பு இருக்கும். ஒருவரால் உமக்கு எந்த உதவியும் செய்ய இயலவில்லை என்ற நிலை வந்தவுடன் கவனிப்பும் கண்காணிப்பும் குறைந்து விடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7 36-50) பரிசேயர் ஒருவர் இயேசுவை தம்மோடு உண்பதற்கு அழைக்கிறார். அழைப்பதோடு அவருடைய கவனிப்பு முடிந்துவிட்டது. கால் கழுவ தண்ணீர் தரவில்லை அன்பு முத்தம் கொடுக்கவில்லை தலையில் எண்ணெய் பூசவில்லை. (இவையெல்லாம் விருந்தோம்பலின் செயல்பாடுகள், தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினருக்கு செய்ய வேண்டிய கடமை) மேலோட்டமான கவனிப்பை கொடுத்தவர் ஆழ்ந்த அன்பை கொடுக்க தவறிவிட்டார். 

ஆனால் சமூகத்தால் பாவி என்று கருதப்பட்ட ஒரு பெண் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய காலுக்கு நறுமணத் தைலம் பூசி அவரை நன்கு கவனிக்கிறார்.

இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயர் அந்த பெண்ணை பாவியாக கருதினார். ஆனால் தன்னுடைய கடமையிலிருந்து தவறி போனார். 

ஆனால் தன்னுடைய மிகுதியான அன்பால் இயேசுவின் மன்னிப்பை பெறும் பாக்கியத்தை பெற்றார் அந்த பெண். யூத சமூகத்தில் பெண் மட்டும் பாவியாக கருதப்பட்டார். பாவம் செய்வதற்கு காரணமாக இருந்த ஆண் நிரபராதி.

அந்தப் பெண்ணின் கவனிப்பு அவருக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுத்தது. தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டு விடலாம் என்ற பாடத்தை அல்ல, மாறாக தவறுக்கு வருந்தும்போது மன்னிப்பு உண்டு என்ற ஆழ்ந்த சிந்தனையை இப்பகுதி நமக்கு விளக்குகிறது.

1யோவான் 1:8 இவ்வாறு சொல்கிறது, "ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது."

செய்த பாவத்திற்கு மன வருத்தமும், பாவத்திற்கு பரிகாரமும் நமக்கு புது வாழ்வை பெற்றுக் கொடுக்கும். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...