24_09

ஆண்டவர் அளித்தார்... ஆண்டவர் எடுத்துக் கொண்டார்...


பொதுக் காலம் 26ஆம் வாரம்

30.09.2024 - திங்கட் கிழமை

நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? - 1 கொரிந்தியருக்கு 4:7

மனநிறைவை குறிக்கும் வார்த்தை, "எதுவும் என்னுடையது அல்ல, எல்லாம் பெற்றுக் கொண்டதே".

எல்லாம் எனக்குரியது என்கிற போது இங்கு பிரச்சினை. ஒன்றை இழக்கும் போது மனம் வாடி போகிறது. ஒன்றை பெறும் போது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. 

எனக்குரியது என்று இப்போது உள்ளது எல்லாம், என்றோ ஒருநாள் யாரோ கொடுத்தது/விட்டு சென்றது. கொடுத்தவரும் ஏற்கனவே யாரிடமிருந்தோ பெற்றுக் கொண்டதுதான். இதை சபை உரையாளர் நூல் 2:21 இவ்வாறு சொல்கிறது, "ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே". 

பெற்றுக் கொண்டதை எல்லாம் யாரும் எடுத்துச் செல்ல முடியாது.

இன்றைய முதல் வாசகத்தில் (யோபு 1:6-22) யோபு தன்னிடம் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் இழந்து விடுகிறார். பிள்ளைகள் தொடங்கி தன்னுடைய செல்வம் அனைத்தும் சூறையாடப்படுகிறது. 

இருந்தபோதிலும், என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியாய் யான் சொல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவர் பெயர் போற்றப்படுக! என்கிறார் யோபு.

 தன் மனைவி கடவுளை பழித்துரைக்கச் சொன்ன பதிலும் கூட அவர் கடவுள் மீது குற்றம் சாட்டவில்லை, பாவம் ஏதும் செய்யவில்லை.

யோபு கொண்டிருந்த மனநிலை, எல்லாம் கடவுளிடமிருந்து வந்தது என்பதுதான். (தொடர்ந்து யோபு நூலை படிக்கின்ற போது தன் பிறந்த நாளை பழிக்கிறார், புலம்புகிறார், வருந்துகிறார். இருந்தபோதிலும், அவர் கடவுளுக்கு எதிராக பாவம் ஏதும் செய்யவில்லை).

யோபுவின் மனநிலை நம் மனநிலையாக  வேண்டும். 

இருப்பதை இழந்த போதிலும் நம்பிக்கை குறைவு படாத மனநிலை.

இருப்பதற்கு மேல் எல்லாவற்றையும் குவித்து வைக்க வேண்டும் என்ற மனநிலை மறைய வேண்டும். 

இறுக்கமான மனநிலையில் இருந்து இரக்கமான மனநிலை நம்மில் உருவாக வேண்டும்.

இரக்கம் இருக்கும் இடத்தில் இருப்பதை இழக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். 

இருப்பதை இழக்கின்ற போது நமக்கான செல்வம் விண்ணகத்தின் சேர்க்கப்படும். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...