24_09

ஆரோக்கியம் தரும் அன்னை

"அன்புக்குரியவரே, நீர் ஆன்ம நலத்தோடிருப்பதுபோல் உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே நிகழவும் வேண்டுகிறேன்” - 3 யோவான் 1:2

அன்னை மரியாவின் பிறப்பை இன்று கொண்டாடுகிறோம். எல்லா செல்வமும் புகழும் இருந்தாலும் உடல் நலம் இல்லையென்றால் எதையும் அனுபவிக்க முடியாது. உடல்நலனுக்காக மனஅமைதிக்காக இன்று எத்தனையோ கோடிகள் செலவு செய்யப்படுகின்றன.

யோகா, உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றின் வழியாக உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்த பல்வேறு இடங்களுக்கு மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எசாயா இறைவாக்கினர் (55:2) சொல்வது போல, “உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்” என்பது போல தான் நம் வாழ்க்கைப் பயணம் உள்ளது.

மனதை ஒருமுகப்படுத்தி இறைவனோடு இணையாத வரை உடலுக்கு ஆரோக்கியம் என்பது இல்லை.

தன்னை இறைவனுக்கு கையளித்த அன்னை மரியா உடலிலும் மனதிலும் ஆரோக்கியம் நிறைந்தவராக இருந்தார். எனவே தான், சமூகம் என்ன சொல்லும்? என்ன நினைக்கும்? என்று அன்னை இறைத் திருவுளத்திற்கு தயக்கம் காட்டவில்லை. துணிந்து முடிவு எடுத்தார். நான் அண்டவரின் அடிமை என்று உரைத்தார்.

நம் வாழ்வில் நாம் பலவற்றிற்கு அடிமையாக இருக்கின்றோம். ஊடகம், அலைபேசி, புறணி பேச்சு, உடலின் இச்சை, உணர்வுகள் என்று பலவற்றிற்கு அடிமையாக இருக்கின்றோம். தேவைக்கு பயன்படுத்துவது தவறல்ல அளவுக்கு மீறுவது தான் ஆபத்து. அளவோடு பயன்படுத்துவோம் ஆரோக்கியத்தோடு வாழ்வோம்.

ஆரோக்கியமான பேச்சு, ஆரோக்கியமான சிந்தனை ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கும்.

ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையால் ஆரோக்கியத்தோடு வாழவும் மற்றவர்களை வாழ வைக்கவும் முன்வருவோம். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...