பொதுக் காலம் 22ஆம் வாரம்
05.09.2024 - வியாழக் கிழமை
அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது, ஆனால் அடுத்த நொடி நமக்கு உண்டு என்ற நம்பிக்கையில் தான் நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்பிக்கையிலிருந்து பிறழ்ந்து போகாதவாறு நாம் நம்மை காத்துக் கொள்ள வேண்டும். சில மனிதர்கள் வாழ்க்கையை சலித்துக் கொள்வது உண்டு, என்ன வாழ்க்கை இது? வாழ்ந்து என்ன ஆகப்போகிறது? ஏன் வாழ வேண்டும்?
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் மற்றவருக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை விட்டு செல்கிறது.
கால்களை இழந்தவர்களும் கைகளை இழந்தவர்களும் நம்பிக்கை இன்னும் கால்களினால் கரங்களினால் இயங்குவது உண்டு.
நம்பிக்கை இல்லாமல் சுருண்டு படுத்துக்கொண்டால் நம்மீது கட்டெறும்பு கூட கூடு கட்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஐயா, இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்ற நம்பிக்கை குறைவோடு இருந்தார் பெயரில். இருந்தபோதிலும் இயேசுவின் சொற்படியே, நம்பிக்கையோடு வலைகளை கடலில் போடுகிறார்கள். தளர்வுற்ற பொழுதிலும் இறைவார்த்தையால் தூண்டப்பட்டு நம்பிக்கையோடு வலைகளை கடலில் போடுகிறார். மிகுதியான மீன் பிடிபாட்டை கண்டு திகைப்புறுகிறார் பேதுரு.
நம்புகிறவருக்கு எல்லாம் கிடைக்கும் என்பதற்கு ஏற்ப பேதுருவுக்கு நிரம்ப மீன் கிடைத்தது.
அவரின் நம்பிக்கை அறிக்கை வெளிப்பட்ட விதம், "ஆண்டவரே நான் பாவி, நீர் என்னை விட்டு போய்விடும்". (இது நம்பிக்கையின் கூற்று)
கடவுளை அறியாத நிலையில் தன் நிலையை அவர் உணரவில்லை. கடவுளின் உடனிருப்பு அவரின் இயலாமையை உணர வைத்தது.
நற்செய்தி பதிவு செய்கிறது, அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டை கண்டு திகைப்புற்றனர்.
அன்று முதல் பேதுரு மனிதரை பிடிப்பவராக மாறிவிடுகிறார்.
நம்பிக்கை அறிக்கையிட்டு கடவுளின் வார்த்தையின் படி செயல்பட்டதனால் அவர் கடவுளுக்கு உகந்தவராய் மாறினார்.
நிலையற்ற இவ்வுலகில் நிலையான செல்வமாகிய இயேசுவைக் கண்டு அவரில் நம்பிக்கை கொள்வோம்.
இன்று நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளோடு நமக்குள்ள நம்பிக்கை மிகுதிப்படுத்தப்பட வேண்டும்.
நம்பிக்கை இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை போன்றது. நம்பிக்கை எனும் நங்கூரம் தான் வாழ்க்கையின் ஓட்டத்தை சீர்படுத்துகிறது.
சந்தேகம் வாழ்வின் மகிழ்வை சிதைத்துவிடுகிறது. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை பேசாமலே சிலர் தீர்த்துவிட எண்ணுகிறார்கள்.
நம்பிக்கை குறைவு நல்வாழ்வை சிதைத்து விடும். குடும்ப உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும்.
நம்பிக்கையோடு பயணிப்போம்...
இறை உறவிலும் மனித உறவிலும் நிலைத்திருப்போம்.
No comments:
Post a Comment