24_05

நம்பிக்கை மிகுதியாக வேண்டும்...

20.05.2024 - திங்கட் கிழமை

மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது" - திருப்பாடல்கள் 9:18

எல்லாம் மாறும் என்பது ஒருவகை நம்பிக்கை. எல்லாவற்றையும் மாற்றுவதே முழு நம்பிக்கை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:14-29) தீய ஆவி பிடித்த பேச்சிழந்த மகனின் தந்தை தன் மகனுக்காக நம்பிக்கையோடு இயேசுவிடம் வருகிறார். 

முதலில் இயேசுவின் சீடர்களால் அவருடைய நோயை குணப்படுத்த முடியவில்லை, பேய் தொல்லையில் இருந்து விடுதலை கொடுக்க அவர்களால் முடியவில்லை. அதற்கு காரணம் சீடர்களின் நம்பிக்கை குறைவு. 

ஆனால் இயேசுவை நாடி வந்தவருக்கு நம்பிக்கை மிகுதியாக இருந்தது. நான் நம்புகிறேன் என்கிறார். அவருடைய நம்பிக்கையால், இயேசுவின் பரிவை அவர் பெற்றார்.

அந்த தந்தையினுடைய நம்பிக்கை வழியாக தன்னுடைய சீடர்களுடைய நம்பிக்கையையும் இயேசு மிகுதிப்படுத்துகிறார்.

வார்த்தை வழி நம்பிக்கை மட்டும் ஒருவருக்கு போதாது. செயல்வழி நம்பிக்கை தான் ஒருவரை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும். 

இயேசுவின் சீடர்கள் அந்த புதுமையை செய்வதற்கு தடையாக இருந்தது, இறைவேண்டலின்மை நோன்பின்மை.

நம்முடைய நம்பிக்கையும் சில வேளைகளில் இயேசுவின் சீடர்களைப் போல தான் இருக்கிறது. செயலற்ற நம்பிக்கையாக நம் வாழ்க்கை இருக்கிறது.

நம் எளிய நம்பிக்கை நம் வாழ்க்கையை உயர்த்தும்...

நம்பிக்கையை மிகுதியாக்குவோம்... நல்லதை பெற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...