24_05

அன்பில் நிலைத்திருக்க…

02.05.2024 - வியாழக் கிழமை

“இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது” - 1கொரி 13:8 

மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அன்பில் பிறப்பெடுக்கிறது. யார் மீது அன்பு இருக்கிறதோ அவர்கள் சொல்வதையெல்லாம் நம்புகிறோம். நம்பிக்கை மகிழ்ச்சியான வாழ்வை கொடுக்கிறது. திருத்தூதர் பவுல் சொல்வது போல, “அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்” (1கொரிந்தியர் 13:7).

அன்பு நம்பிக்கை வைத்தவரிடம் பலவீனப்பட்டு போகிறது. நெருக்கமானவரின் வார்த்தையையும் வாழ்வையும் நம்பும் ஆற்றல் அன்புக்கு உண்டு.

அன்பு பரிமாறப்பட பணம் தேவையில்லை, உணர்வு பரிமாறப்பட்டாலே போதும். பணத்தில், அதிகாரத்தில், மிரட்டலில் உருவாகும் அன்பு எல்லாம் கானல் நீர் போல மறைந்து போகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:9-11) தன் தந்தையோடு இயேசு அன்பில் இணைந்திருப்பது போல, நாமும் அவருடைய அன்பில் நிலைத்திருக்க அழைப்பு விடுக்கிறார். இங்கு தந்தையின் கட்டளைகளை கடைப்பிடிப்பதன் வழியாக இயேசுவின் அன்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இயேசுவின் கட்டளை அன்பை (இறை அன்பு ூ பிறர் அன்பு) பற்றியது. அந்த அன்பு இயேசுவில் நிறைவு பெறுகின்றது. நாம் அன்பில் நிலைத்திருக்க அவருடைய கட்டளையை கடைப்பிடிக்க வேண்டும்.

கடவுளின் கட்டளையை கடைப்பிடிப்போர் என்றும் பசுமையாய் இருக்கும் மரத்திற்கு ஒப்பாவர். பசுமையான அந்த மரம் அன்புக் கனிகளை கொடுக்கட்டும். அதை ருசிப்போர் அன்பில் நிலைத்திருந்து அந்த அன்பை விதைக்கட்டும்


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...