24_05

இயேசுவின் சார்பாக இருப்போம்!

 

22.05.2024 - புதன் கிழமை 

"அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, நாம் அவருடைய பிள்ளைகளே" - திருத்தூதர் பணிகள் 17:28

உண்மை சார்ந்த நிலை பொய்மை சார்ந்த நிலை, இந்த இரண்டில் ஏதாவது ஒரு பக்கம்தான் நாம் இருக்க முடியும். உண்மையின் பாதையில் நடந்தால் உண்மைக்கு நாம் சான்று பகர்கிறோம் தீமையின் பக்கம் இருந்தால் நாம் தீமைக்கு சான்று பகர்கிறோம். 

எப்படி பார்த்தாலும் நாம் ஏதாவது ஒன்றை சார்ந்து தான் இருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:38-40) இயேசுவை சாராத ஒருவர் இயேசுவை சார்ந்து இருக்கிறார். இயேசுவோடு இணைந்து அவர் வல்லசெயல் செய்யவில்லை, ஆனால் இயேசுவின் பெயரால் அவர் வல்லசெயல் செய்கிறார். உண்மையின் பக்கம் இருக்கக்கூடியவர்கள் இயேசுவை நம்பாவிட்டாலும், அவர்கள் இயேசுவின் பக்கம் தான் இருக்கிறார்கள்.

ஏனென்றால், இயேசுவே உண்மையாய் இருக்கிறார். 

நல்லது நடப்பதை இயேசு ஒருபோதும் தடுப்பதில்லை, தீமை நடைபெறுவதை இயேசு ஒருபோதும் விரும்புவதில்லை.

நாம் உண்மையின் பக்கம் இருந்து தடை வருகின்றபோது நிலை தடுமாறி பொய்மையை சார்ந்து இருந்து விடுகிறோம்.

உண்மைக்கு சான்று பகர்ந்து, அதனால் துன்பப்படுவது பொய்யை சார்ந்து இருப்பதை விட எவ்வளவோ மேலானது.

நாம் இயேசுவை சார்ந்து இருக்க உண்மையைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் பெயரால் பல நல்ல செயல்களும் வல்ல செயல்களும் நடைபெற வேண்டும்.



No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...