24_05

நிறைவுள்ளவருக்கு சான்று பகர…

06.05.2024 - திங்கட் கிழமை

“இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்” - யோபு 16:19

வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை வாழ்வது வாழ்க்கை அல்ல. இருக்கிற வாழ்க்கையை பயனுள்ள முறையில் வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும். இருப்பதில் நிறைவோடும், பகிர்வதில் மகிழ்வோடும் வாழ்க்கை நகர வேண்டும்.

அடுத்தவர் உயர்ந்த நிலையில் இருக்கிறாரே என்று பெரூமூச்சு விடுவதில் வாழ்க்கை நகர்ந்தால் அது இனிமையான வாழ்க்கையாக இருக்காது. என் வாழ்வு உயர நான் என்ன செய்ய வேண்டும் என்பதே என் எண்ணமாக இருக்க வேண்டும்.

எல்லாம் இருப்பவரும் நிறைவோடு இருப்பதில்லை. எதுவும் இல்லாதவரும் நிறைவோடு இருப்பதில்லை. நிறைவை நாம் காண்பது எப்போது? சீராக்கின் ஞான நூல் 14:9 இவ்வாறு சொல்கிறது, “பேராசை கொண்டோர் உள்ளது கொண்டு நிறைவு அடைவதில்லை; பேராசையுடன் கூடிய அநீதி, உள்ளம் தளர்வு அடையச் செய்கிறது”. 

இன்றைய நற்செய்தி வாசகம் (யோவான் 15:26-16:4) இறைவனுக்கு சான்று பகர நமக்கு அழைப்பு விடுக்கிறது. தந்தையையும் மகனையும் அறியாதவர்கள் முன் நாம் கடவுளுக்கு சான்று பகர வேண்டும். 

எப்போது நாம் சான்று பகர்வோம்? நிறைவு நம்மில் குடிகொள்ளும்போது. அந்த நிறைவை தருபவர் இயேசு கிறிஸ்து. தூயஆவி என்னும் துணையாளராம் நிறைவை இயேசு தருகிறார். அவருக்கு சான்று பகர நமக்கு பலத்தை விடுக்கிறார்.  

“உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்” (மத்தேயு 5:48) என்ற இறைவார்த்தையை போல நாம் நிறைவுள்ளவர்களாய் இருந்து இறைவனுக்கு சான்று பகர்வோம். துன்பங்களையும் தாண்டி, மிரட்டல்களையும் கடந்து இறைவனில் நிறைவை காண்போம். 


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...