24_05

புரிந்துக் கொள்ள வேண்டும்...

29.05.2024 - புதன் கிழமை 

"ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்" - எபேசியர் 5:17

இன்றைய எதார்த்த வாழ்க்கைக்கு புரிந்து கொள்ளுதல் அவசியமாக இருக்கிறது. ஒருவரை புரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ளாமல் நாம் அவரோடு பயணிக்க முடியாது. (புரிந்து கொள்ளுதலும் அறிந்து கொள்ளுதலும் முழுமையான புரிதலை சில வேளைகளில் குறிப்பது அல்ல, மாறாக ஓரளவு தான் நாம் மற்றவர்களை புரிந்தும் அறிந்தும் கொள்ள முடியும்)

சரியான புரிதல் இல்லாமையினால் தான், பல வாழ்க்கை பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.

அடுத்த பிரச்சனை, யார் யாரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ள வேண்டும் அதில் நான் நீ என போட்டி மனப்பான்மை இருக்கக்கூடாது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:32-45) இயேசுவை புரிந்து கொள்ளாத சீடர்களை பற்றி நாம் பார்க்கிறோம். இயேசு தன்னுடைய இறப்பை குறித்து பேசிக் கொண்டிருக்க கூடிய வேளையிலே, செபதேயுவின் மக்களான யாக்கோபும் யோவானும் அதிகார இருக்கைக்காக இயேசுவிடம் பணிந்து நிற்கிறார்கள். 

இங்கு இயேசுவோடு இருந்தும் அவர்கள் இயேசுவை பற்றி புரிந்து கொள்ளவில்லை. இயேசுனுடைய தலைமைத்துவம் அல்லது அதிகாரம் என்பது மற்றவர்களுக்கு பணி செய்வதில் தான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. எனவேதான் அவர்கள் முதன்மையான இடங்களை நோக்கி நகர்ந்தார்கள்.

நம்முடைய வாழ்வு சிறக்க வேண்டும் என்று சொன்னால் நம்மோடு இருக்கக் கூடியவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புரிதலும் அறிதலும் இல்லாமல், நாம் எந்த ஒரு காரியத்தையும் முன்னெடுத்து செய்ய முடியாது.

இயேசுவை பின்பற்றுகிறோம் என்று சொன்னாலும், இயேசுவின் வார்த்தைகளை உள்வாங்குகிறோம் என்று சொன்னாலும் அங்கு புரிதல் இல்லை என்று சொன்னால் உள்வாங்கிய வார்த்தைகள் வீணானதாய் போகும். 

சரியான புரிதலை கொண்டிருப்போம், பணிவுள்ள அதிகாரத்தோடு இயேசுவின் பணி செய்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...