24_05

இயேசுவின் சீடராக ஒரு வாய்ப்பு...

 


23.05.2024 - வியாழக் கிழமை 

சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்" - திருத்தூதர் பணிகள் - 13:52

ஒவ்வொரு தலைவரையும் ஒவ்வொரு (மக்கள்) கூட்டம் பின்பற்றுகிறது. தலைவரை பின்பற்றுதல் என்றால் தலைவரின் கொள்கைகளை பின்பற்றுதலாக இருக்க வேண்டும்.

இக்கால கூட்டம் எல்லாம் கொள்கை ஈர்ப்பினால் சேரும் கூட்டம் அல்ல, மாறாக பண கவர்ச்சியினால் பின்பற்றும் கூட்டமாகவே இருக்கிறது. 

கொள்கைகள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஆனால் கொள்கைகள் முக்கியமல்ல கூடும் கூட்டத்திற்கு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:41-50) இயேசுவின் சீடராக மாற ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

- கிறிஸ்துவை சார்ந்து இருக்க வேண்டும்

- யாரையும் பாவத்தில் விழ வைக்க கூடாது, தானும் பாவத்தில் விழக் கூடாது

- நெருப்பால் தூய்மையாக்கப்பட வேண்டும்

- உப்பின் தன்மை கொண்டிருக்க வேண்டும்

- ஒருவர் மற்றவரோடு அமைதியுடன் வாழ வேண்டும் 

இவை தான் இயேசுவின் சீடராக கொடுக்கப்படும் வாய்ப்பு.

இயேசுவின் கூட்டம் (சீடத்துவம்) எதிர்பார்ப்பை நோக்கி பயணிக்காது, மாறாக இருப்பதை இழந்து இயேசுவை பின்பற்றும். 

இயேசு கொடுக்கும் சீடத்துவம் ஆசைகளை துறப்பதிலும் தன்னை  இழப்பதிலும் தொடங்குகிறது.

வார்த்தைகளை காதால் கேட்டல் எல்லோருக்கும் எளிது. ஆனால் கடவுளின் வார்த்தையை, வாழ்க்கை வழியாக  செயல்படுத்துவதில் தான் சீடத்துவத்தின் மகத்துவம் அடங்கி இருக்கிறது.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...