24.05.2024 - வெள்ளிக் கிழமை
இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்" - தொடக்க நூல் 2:24
படைப்பின் நோக்கமே ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ வேண்டும் என்பது தான். பிரிவினையை நோக்கி பயணிக்கும் கால்கள் பிளவுப்பட்டே இருக்கும், இருக்க வைக்கும்.
பிடிக்கவில்லை என்பதற்கு பிரிவினை மட்டும் பதில் அல்ல. மாற்ற வைப்பதும், மாற்றத்தை நோக்கி பயணிப்பதும் நம் கையில் உள்ளது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:1-12) இயேசுவை சோதிப்பதற்காக 'கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?' என்று பரிசேயர் கேள்விகளை முன் வைக்கிறார்கள். மோசேயின் சட்டத்தையும் முன்வைக்கிறார்கள்.
இயேசு அவர்களுக்கு கொடுக்கக்கூடிய பதில் "கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்பதே. இணைந்து வாழ வேண்டியவர்கள் பிரிவினையை கையாளும்போது அவர்கள் மீண்டும் தவறு செய்கிறார்கள்.
திருமணத்திற்கு முன், ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக தெரிந்திருந்தும், திருமணத்திற்கு பிறகு மனதாங்கல் உண்டாகிறது. அது சரியில்லை, இது சரியில்லை என்று காரணம் சொல்லி பிரிவினைக்கு வழிவகை செய்கிறார்கள்.
சிலரின் விவாகரத்து சிலருக்கு பாடம் ஆகிறது. பிரிந்து வாழ ஆரம்பித்த சில மாதங்களிலே கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. (எதையும் செய்யும் முன் சிந்திப்பதே நல்லது)
இணைந்து வாழ்தல் கடவுளின் விருப்பம். பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்கள் கடவுளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
நம் வாழ்க்கையோடு இணைந்து இருப்பவர்களை நாம் மதிப்போம். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வோம்.
அன்பு இருக்கும் இடத்தில் பிரிவினைக்கு இடம் இருக்காது.
குடும்ப ஒற்றுமையில், குடும்ப இணைப்பில் இறைவன் இணைகிறார்.
குடும்பத்தை பற்றி அருமையான விளக்கம் நன்றி தந்தையே
ReplyDeleteSuper
ReplyDelete