25_03

இரக்கத்தோடு வாழ...

தவக்காலம் இரண்டாம் வாரம்

17.03.2025 - திங்கட்கிழமை 

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்? - மீக்கா 6:8

இன்று மனிதர்கள் இரக்கம் காட்ட தயங்குகிறார்கள். யாருக்கு இரக்கம் காட்டுவது? யார் மேல் பரிவு கொள்வது? யார் இரக்கத்தை பெற தகுதியுடையவர் என்பது மிக பெரிய கேள்வியாக இருக்கிறது. 

இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்பு தான் கிடைக்கும் என்பது முற்றிலும் உண்மை. தன் மகனோ மகளோ தவறு செய்தாலும் கூட தாயின்/தந்தையின் இரக்கம் அனைத்தையும் மன்னித்து விடும். இரக்கம் தான் ஒவ்வொரு தாயின்/தந்தையின் இயக்கம். 

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கதோடு இருப்போம் என்பார் புனித அன்னை தெரசா.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6: 36-38) "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" என்கிறார் இயேசு.

இரக்கக் குணத்தோடு செய்ய வேண்டிய செயல்கள்

1. தீர்ப்பிடாதே

2. கண்டனம் செய்யாதே

3.மன்னியுங்கள்

4. கொடுங்கள்

யாரும் யாரையும் தீர்ப்பிடாமல் இங்கு வாழ்வதில்லை. தன்னை நியாப்படுத்தா இங்கு அடுத்தவரை குறை சொல்ல வேண்டி இருக்கிறது 

இங்கு நிரபராதியை நிற்க வைத்து கேள்வி கேட்டு குற்றவாளி என்ற பலியை சுமத்தி விடுகிறோம்

சிறிய தவறு செய்தவர்களை கூட நாம் மன்னிக்க தயாராக இல்லை. என்ன பிரச்சினை நடந்தது என்பது கூட மறந்திருக்கும், ஆனால் பகைமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்

இருப்பது போதாது என்று அடுத்தவரிடம் இருப்பதையும் பிடுங்கிக் கொள்ள எண்ணுகிறோம்.

இப்படி எல்லாவற்றையும் செய்து விட்டு எப்படி கடவுள் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்க முடியும். 

தவக்கால பாடல் வரிகள் - குற்றவாளி கூண்டில் வாழும் மனித இதயமே தீர்ப்பு சொல்லும் அருகதை உனக்கு உள்ளதா? 

இங்கு யாரும் யாரையும் விட தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல... யாரையும் தீர்ப்பிட யாருக்கும் அருகதை இல்லை. (தவறை சுட்டிக் காட்ட உரிமை உண்டு. குற்றவாளியாக தீர்ப்பிடுவது வேறு, குற்றத்தை உணர வைப்பது வேறு).

அற்ப பண ஆசைக்காக, தன் இன்பத்திற்காக, தன் வாழ்வுக்காக, தற்பெருமைக்காக இன்று நாம் பலரை தவறாக தீர்ப்பிட்டு கொண்டிருக்கிறோம்.

நாம் எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...