25_03

யாரையும் சோதிக்க வேண்டாம்...


தவக்காலம் முதல் ஞாயிறு 

09.03.2025 - ஞாயிற்றுக் கிழமை 

எல்லா வழிகளிலும் சோதனை வரும். சோதனையை எதிர்த்து நின்றவர்கள் வெகு சிலர், சோதனையை கண்டு துவண்டு போனவர்கள் அதிகம். 

எப்படி சோதனை வருகிறது? அல்லது யாரிடமிருந்து சோதனை வருகிறது?

1. நம்மாலயே சோதனை வருகிறது

யாக்கோபு எழுதிய திருமுகம் 1:14

ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது.

2. மற்ற மனிதர்களிடமிருந்து வருகிறது

சபை உரையாளர் 8:9

உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது.

3. நம்பிக்கை ஆய்ந்து அறியப்பட 

நம் நம்பிக்கை உறுதியானதா? போலியானதா? என்பதை அறிய நாம் சோதிக்கப்படுகிறோம்.

சோதிக்கிற மனிதர்கள் சோதனைகளுக்கு மத்தியிலும் சாதிக்கிற மனிதர்கள் என்று மனிதர்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சோதிக்கப்படுகிறார்.

கற்களை அப்பமாக மாற்ற

நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்க

மேலே இருந்து குதிக்க சொல்கிறது சாத்தான். 

நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது சாத்தான்.

சாத்தனுக்கும் விவிலியம் தெரியும்... இதை செய்யாதே இதை செய் என்று யார் சொன்னாலும் அதில் சொல்லப்பட்டதையும் சொன்னவரையும் ஆய்ந்து பார்த்து உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சோதிக்க பலர் தயாராக இருக்கிறார்கள். சோதனையில் நாம் விழுந்தாலும் எழுந்து வர வேண்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...